Skip to main content

வாராக்கடனில் (NPA) கல்விக்கடன் இணைப்பு ! பேச மறுக்கும் கட்சிகள் !

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

இந்தியாவில் ஏழை , எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியை பெறும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் "கல்விக்கடன்" (Education Loan) கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மத்திய நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் பல லட்சம் மாணவர்கள் உயர்கல்வியான (பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு ,வெளிநாடுகளுக்கு சென்று படித்தல்) பயில இந்திய வங்கிகளின் மூலம் கல்வி கடனை பெற்று படித்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடியை கல்விக்கடனுக்கு வழங்குகிறது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்.  

பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை ! 

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் , பாலிடெக்னிக் மற்றும் மற்ற படிப்புகள் படித்து முடித்த மாணவர்களில் 50% மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் வங்கியில் கல்வி கடனை பெற்று படித்தவர்கள் ஆவர். படிப்பை முடித்த பிறகு கல்வி கடனைக்கட்ட இயலாதவர்களுக்கு சமந்தப்பட்ட வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கின்றனர். 

 

bank



வாராக்கடனில் (Non- Performing Asset) கல்வி கடனை இணைக்கும் வங்கிகள் !

வாராக்கடன் என்றால் என்ன ? என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலானோருக்கு தெரியாது ! 

இந்தியாவில் வாராக்கடன் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றங்கள் , உச்சநீதிமன்றம் , மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றனர். வாராக்கடன் என்பது தொழில் தொடங்க  வங்கியிடம் கடன் வாங்கி பின்பு அந்த கடன் தொகையை ஒவ்வொரு மாதமும் வட்டி மற்றும் அசலுடன் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். 

 

bank



ஒர் குறிப்பிட்ட மாதத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகையை வங்கியிடம் செலுத்தாத பட்சத்தில் தனக்கென்று ஏற்கெனவே உள்ள கணக்கை வாராக்கடனில் இணைத்து விடுவார்கள். இதை வங்கி பொது மேலாளர் மட்டுமே செய்வார். பின்னர் வாராக்கடனில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என சமந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் மூலம் வங்கி மேலாளர் தகவல் தெரிவிப்பார். சமந்தப்பட்ட நபர் வங்கி மேலாளரை சந்தித்து கட்ட வேண்டிய தொகையை உடனடியாக செலுத்தினால் அந்த வாராக்கடன் பட்டியலில் இருந்து சமந்தப்பட்ட நபரின் பெயரை நீக்குவார் . ஒரு வேளை கடன் பெற்ற நபர் வங்கி மேலாளரை சந்திக்கவில்லை எனில் இரண்டாவது முறையாக நீதிமன்ற நோட்டீஸ் அனுப்புவார்.அதில் கடன் பெற்ற நபர் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும் மூன்று முறை நீதிமன்றத்தில் சமந்தப்பட்ட நபர் ஆஜராக தவறினால் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நீதிமன்ற நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்பு நீதிமன்ற ஆணையை பயன்படுத்தி வங்கி அதிகாரிகள் சமந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வார்கள்.

 

bank



இந்த முறையே வாராக்கடன் (NPA) ஆகும். இந்த வாராக்கடனில் தான் மாணவர்கள்  தங்கள் பெற்ற கல்வி கடனை கட்ட இயலாத இளைஞர்களை வங்கிகள் வாராக்கடன் சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தில் அலைய விடுகிறது. இதனால் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோடி கோடியாய் கடன் பெற்றுக்கொண்டு வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் தொழிலதிபர்கள் . ஆனால் லட்சக்கணக்கில் மட்டும் கல்வி கடனை பெற்று படித்த இளைஞர்கள் நீதிமன்ற வாசலில் உள்ளனர். இதனால் இளைஞர்கள் சிலர் தவறான முடிவுக்கு செல்லவும் வாய்ப்பு உண்டு என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத இந்த கல்வி கடன்  வாராக்கடனில் இணைப்பு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.  இது குறித்து மாநில மற்றும் தேசிய கட்சிகள் பேச மறுக்கிறது மற்றும் இது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதை மறுக்கும் கட்சிகள் என்பது தற்போது தெளிவாக தெரிக்கிறது. இந்தியாவில் இயங்கும் வங்கிகளின் இந்த அடக்குமுறையை ஏன் தடுக்கவில்லை என இந்திய இளைஞர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்புகின்றனர். அதே போல்  இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் என்றால் மிகையாகாது.

வழக்கு பதிவால் இளைஞர்களின் கனவுகள் சிதைக்கிறது ! 

படித்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசுத்தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் இந்திய ஆட்சிப்பணி , ரயில்வே துறை , ராணுவ துறை , பெல் மற்றும் கெயில் போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணிப்புரிய அதற்கான தேர்வுக்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்குகளால் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் இளைஞர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளால் அரசு பணி அவர்களுக்கு கேள்வி குறியாக மாறுகிறது. எனவே கல்வி கடன் பெற்றவர்களை குற்றவாளியாக கருதக்கூடாது என்ற கோரிக்கையை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! 

வாராக்கடனில் கல்வி கடனை இணைப்பதை உடனடியாக அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் , வங்கிக்கடன் பெற்று திருப்பி செலுத்தாத இளைஞர்கள் மீதான குற்ற நடவடிக்கையில் இருந்து காக்க வேண்டும் என அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக வாராக்கடன் சட்டத்தில் இருந்து கல்விக்கடனை நீக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்து மதிப்பு; பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The next problem that occurred in ByJus

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன்(44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்காரப் பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி கற்கப் பலரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பைஜூஸுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடன் சுமை, ஊழியர்களின் பணி நீக்கம், வருவாய் இழப்பு, அடுத்தடுத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எனக் கடும் பின்னடைவை பைஜூஸ் சந்தித்தது. 

இதனால், பைஜூஸில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து, தங்கள் பணத்தைத் திரும்ப பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்த நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலவாணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரவீந்திரன் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அந்நிய செலவாணி மேம்பாட்டு சட்டத்தின்படி, சுமார் ரூ.9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது குற்றம்சாட்டியது.

அடுத்தடுத்து சிக்கல்களைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து, ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க, அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பைஜூஸ் பங்குதாரர்கள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (23-02-24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில், நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள், பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

அதே வேளையில், EGM கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களையும்ம் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று பைஜூஸ் நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், EGM கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வரை அமலுக்கு வராது எனத் தெரிவித்தது.

இதற்கிடையே, ஓராண்டுக்கு முன்பு பைஜூஸ் நிறுவனர் ரவீந்தரனின் சொத்து மதிப்பு ரூ.14,545 கோடியாக இருந்த நிலையில், தற்போது பூஜ்ஜியமாக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டது.

பைஜூஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் வேளையில், அர்ஜுன் மோகன் தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற 6 மாதங்களில், அர்ஜுன் மோகன் பதவி விலகியுள்ளார். அர்ஜுன் மோகன் பதவி விலகியதை அடுத்து பைஜூஸ் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை ரவீந்தரன் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைஜூஸ் நிறுவனப் பொறுப்பில் இல்லாதிருந்தாலும் ஆலோசகராக அர்ஜுன் மோகன் தொடருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஏற்கெனவே மோசமாக இருக்கும் வேளையில், சி.இ.ஓ அர்ஜுன் மோகன் வெளியேற்றம் கூடுதல் பிரச்சனையாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது. 

Next Story

வெளியான ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Rahul Gandhi's property value released on filed nomination in election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில், வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது.  மனு தாக்கல் செய்ய இன்று (04-04-24) கடைசி நாள் ஆகும். 

இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளித்த பிரமாண பத்திரத்தின்படி, அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது. 

Rahul Gandhi's property value released on filed nomination in election

அதன்படி, ராகுல் காந்தி, பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.4.3 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகவும், மியூச்சுவல் பண்டில் ரூ.3.81 கோடிக்கு வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம் இருப்பதாகவும், கையிருப்பாக ரூ.55,000 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.9.24 கோடி எனவும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.11.15 கோடி எனவும் தெரிவித்துள்ளார். 

ரூ.9 கோடி மதிப்பில் குருகிராமத்தில் சொந்த அலுவலகம் இருப்பதாகவும், தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு சொந்தமாக கார், அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.