Skip to main content

கல்விக் கடன் - மனமுடைந்த வாலிபர் தற்கொலை!!!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

 kallakurichi district rishivandiyam



கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே புதுவெங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மானு மனைவி குப்பு. இவருக்கு 5 ஆண் மகன்கள் உள்ளனர். அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
 


முதல் மகனான பாண்டுரங்கன் (32) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியர் படித்து வந்தார். படிப்பு செலவிற்காக ரிஷிவந்தியத்தில் உள்ள தனியார் வங்கியில் 2018 -19 ஆம் ஆண்டு ரூ. 2 லட்சத்தி 6,300 கல்விக் கடன் பெற்றுள்ளார். இதில் 10 ஆயிரம் மட்டும் திருப்பிச் செலுத்தி உள்ளார். 40 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மீதி தொகை கட்டாமல் இருந்ததால் கலெக்ஷன் ஏஜென்ட் பணத்தைக் கட்டச் சொல்லி உள்ளனர். மேலும் 3 வருடத்திற்கு ஒருமுறை கடன் தொகையைப் புதுப்பிக்க 2018 ஆம் ஆண்டு கையொப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 


இதையடுத்து பாண்டுரங்கன் பெங்களூரில் உள்ள அத்தை வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார் இதில் கல்விக்கடன் பெற்றுள்ளதாகவும்,. அதனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் அதனால் மனமுடைந்து சாகப் போவதாகவும் வீடியோவில் பதிவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு பெங்களூரில் உள்ள அத்தை வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் சொந்த ஊரான வெங்கலம் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கல்விக் கடன் கட்டமுடியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.