Skip to main content

அவர்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் டுவிட்டரில் பதிவிட்டேன்!- டுவிட் சர்ச்சைக்கு முதல்வர் எடப்பாடி பதில்!!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

 

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முழுமையாக மழைப்பொழிவு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

edppadi palanaisamy press meet



காவிரி மேலாண்மை ஆணைய அறிவுறுத்தலின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும் என நம்புகிறேன். மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிப்பதாக பத்திரிக்கைகள் பேசுகின்றன. நான் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கவில்லை. பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தான் டுவிட்டரில் பதிவு செய்திருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவிற்காக டெல்லி சென்றிருந்த போது அங்கு வாழும் தமிழர்கள் சார்பாக அங்கு வந்த தமிழ் பத்திரிகையாளர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ்வழியில் படிக்க விரும்புகின்றார்கள் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

 

 

 

அவர்களின் கோரிக்கை ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் அப்படி ஒரு டுவிட்டை நான் பதிவிட்டு இருந்தேன். ஆனால் அது சர்ச்சையை கிளப்பியதால் நீக்கிவிட்டேன். தமிழ் பிற மாநிலத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று தான் டுவிட்டரில் பதிவிட்டேன். ஆனால் அதை மும்மொழிக் கொள்கையை தான் ஆதரிப்பதாக அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்களை பரப்புகின்றனர். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.