கோவை தொண்டாமுத்தூர் பகுதியில்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தநிலையில் அங்குபலமணி நேரமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டதால் சுற்றியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
எடப்பாடி பழனிச்சாமி கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதாக பிரச்சாரம் பயணத்திட்டம்அறிவித்த நிலையில் அவர் வருவதற்கு முன்னராகவே ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு நாலாபுறமும் பேரிகார்டுகள்அமைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
ஆனால் அதைத் தொடர்ந்து அவர் வருவதற்கு காலதாமதம் ஆனதால் பலமணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
-சிவா