Skip to main content

கிரிவலப்பாதையில் விரட்டியடிக்கப்பட்ட சாதுக்கள்... இ.பி.எஸ் என்ன ட்ரம்பா?  

Published on 09/09/2020 | Edited on 10/09/2020

 

edappady visit thiruvannamalai

 

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு குறித்த ஆய்வுக்காகவும், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செப்டம்பர் 9- ஆம் தேதி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நிகழ்ச்சி காலை 10:30 மணி அளவில் தொடங்கி மதியம் 1.30 மணி அளவில் முடிந்தது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்துள்ள திட்டப்பணிகள் குறித்தும் செய்யப் போகின்ற திட்டப்பணிகள் குறித்தும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் மதிய உணவிற்காகச் சென்றார். அதன்பிறகு, மதியம் 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுப் பணிக்காகச் சென்றார். அப்படிச் செல்லும் முன் கிரிவலம் வந்தார்.

முதல்வர் கிரிவலம் வருகிறார் என முன்பே முடிவானது. அதனால் கிரிவலப்பாதை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 50 மீட்டருக்கு ஒரு போலீஸ் என்கிற கணக்கில் போலீசார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர். அதோடு கிரிவலப்பாதையில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட வேண்டும் என காவல்துறை எச்சரித்ததால் கடைகள் மூடப்பட்டிருந்தன. கிரிவலப்பாதையில் எப்பொழுதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் நடைபாதையிலும் அங்குள்ள கோயில் வளாகங்களிலும் இருப்பர். பல மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் குடும்பம், உறவுகளை விட்டுவிட்டு அண்ணாமலையாரே கதி என உள்ளனர். இவர்களுக்கு வீடு எல்லாம் கிரிவலப்பாதை நடைபாதை தான். இவர்களுக்கான உணவினை தன்னார்வலர்களும் பக்தர்களும் கொண்டு வந்து தருவர். சில ஆசிரமங்களும் உணவுகளை வழங்கி வருகின்றன. கிரிவலம் வரும் பக்தர்கள் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் சாதுக்கள் அங்கேயே இருப்பர்.

 

edappady visit thiruvannamalai


இந்நிலையில் முதல்வர் கிரிவலம் வருவதை முன்னிட்டு முதல்வரின் கண்களில் சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் படக்கூடாது என காவல்துறையினர், கிரிவலப் பாதையில் இருந்த சாதுக்கள் மற்றும் யாசகர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். இதனால் இன்று காலை முதல் கிரிவலப்பாதையில் சாதுக்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சாதுக்களுக்காகவும் யாசகர்களுக்காகவும் காலை உணவினை கொண்டுவந்த தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் அவர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி விட்டனர். தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை அப்படியே எடுத்துச் சென்றனர்.

நாம் கிரிவலப்பாதையை வலம் வந்தபோது, திருநேர் அண்ணாமலை கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரேயொரு சாதுவை மட்டுமே கண்டோம். இந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ad


முதல்வர் பலத்த பாதுகாப்போடு காரில் கிரிவலம் செல்கிறார், அவரை சாதுக்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள். யாசகம் பெற்று சிவனே என கிரிவலப்பாதையில் அமர்ந்து கிடப்பவர்களை எதற்காக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்புகின்றனர் இந்து அமைப்பினர்.

கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தபோது, குடிசைப் பகுதிகள் அதிபர் கண்ணில் படக்கூடாதென சுவர் எழுப்பி மறைத்தனர். அதற்குச் சற்றும் குறைவில்லாதது இந்த நிகழ்வு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.