திண்டுகல்லில் நடைபெற்ற மருத்துவகல்லூரி திறப்புவிழாவிற்காக மதுரை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் கரோனோ பாதிப்பு அதிகமாக இல்லை. எல்கேஜி,யூகேஜி குழந்தைகளுக்கு 15 நாள் விடுமுறை நிறுத்திவைக்கவில்லை. கரோனோ குறித்து சுகாதாரதுறை மற்றும் சம்பத்தப்பட்ட துறை அமைச்சர் ஆலோசித்து தேவையான முன்னெச்சரிகை நடைவெடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
ரஜினி கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதுபற்றி கற்பனையான கருத்து கூற இயலாது. கமலின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யாரவேண்டுமால் கட்சி ஆரம்பிக்கலாம், மக்களை சந்தித்து கொள்ளலாம். தேர்தலுக்கு பிறகு அமமுக இருக்குமா என்பதை பார்ப்போம். சிஏஏவால் இஸ்லாமியர்கள் அச்சப்பட தேவையில்லை என சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக நேற்றே கூறப்பட்டுவிட்டது என்றார்.
Show comments