ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

ிுப

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள்,மூத்த தலைவர்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் வழங்கினார். அதில், " ஜூலை 11-ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாகத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

admk ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe