Skip to main content

கடலூர்: கட்சி நிர்வாக பணிகளுக்காக மூன்று நிர்வாகிகளை நியமித்த அதிமுக!

Published on 09/11/2019 | Edited on 14/11/2019

கடலூர் மாவட்டம் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் கடலூர் மாவட்டத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டமாக பிரித்து கட்சி பணிகளை செய்து வந்தனர். கிழக்கு மாவட்டத்திற்கு தற்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராகவும், மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் கடலூர் எம்பியாக இருந்த அருண்மொழிதேவன் மாவட்டசெயலாளராக இருந்து வந்தனர். அருண்மொழிதேவனுக்கும், அமைச்சர் சம்பத்துக்கும் கோஷ்டி பூசல் அதிமானதால் சம்பத் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அருண்மொழிதேவன் ஆதரவாளர்களான சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி முருகுமாறன், பண்ருட்டி தொகுதி சத்யாபன்னீர்செல்வம்,விருத்தாச்சலம் கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் புறக்கணித்து வந்தனர். இந்த பிரச்சனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வரை சென்று பேசிமுடிக்கப்பட்டது.

 

 Edappadi Palanisamy, OPS, which divided the Cuddalore district into three

 

இதனைதொடர்ந்து அமைச்சர் சம்பத் வகித்துவந்த கனிமவளத்துறையை சட்டஅமைச்சராக உள்ள சிவி சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டு அவரை டம்மியாக்கினார்கள். அதன்பிறகும் அவர்களது கோஷ்டி மோதல் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் ஆகியோர் கடலூர் மாவட்டத்தை அதிமுக கட்சியில் மூன்றாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனை தேர்வு செய்துள்ளர். இவர் அமைச்சர் சம்பத்திற்கு எதிர் அணியில் உள்ள அருண்மோழிதேவன் ஆதரவாளர். இவருக்கு சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி   ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 Edappadi Palanisamy, OPS, which divided the Cuddalore district into three

 

அதேபோல் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் சம்பத்தை மத்திய மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளனர். இவர் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சட்டமன்ற தொகுதிகள் இவரது கட்டுபாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர். மேலும் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, வித்தாச்சலம் ஆகிய சட்டமன்றதொகுதிகளை மேற்கு மாவட்டமாக அறிவித்து மாவட்ட செயலாளராக அருண்மொழிதேவனே தொடர்ந்து உள்ளார்.

 

 Edappadi Palanisamy, OPS, which divided the Cuddalore district into three

 

அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக புதிய பதிவியை ஏற்றுள்ள எம்எல்ஏ பாண்டியன் முதல்வர் மற்றும் அதிமுக உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்களின் ஆசியை பெற்று சொந்த ஊரான சிதம்பரம் நகருக்கு வருகை தந்தார் இவரை தொகுதியின் எல்லையான பெரியப்பட்டில் அவரது ஆதரவாளர்கள் மேளதாள வானவேடிக்கை முழங்க வரவேற்று அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இவருக்கு மாற்று கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சால்வை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்திளார்களிடம் பேசிய பாண்டியன் சிதம்பரத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் பேசினேன். அதனை தொடர்ந்து சட்டஅமைச்சர் இதுகுறித்து ஆய்வுசெய்ய உத்திரவிட்டுள்ளார். அதனை தற்போது நேரிலும் அவரிடத்தில் பேசிவிட்டு வந்துள்ளேன். கண்டிப்பாக  அதுவிரைவில் நடக்கும் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றார்.

அதேநேரத்தில் அதிமுகவில்  கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்ததை கட்சியின் பல்வேறு தரப்பினர்‘ வரவேற்றாலும் அமைச்சர் சம்பத் தரப்பினருக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆதரவாளர்கள் வெளிபடையாகவே பலரிடம் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 33 சதவீதத்திற்கு மேல் தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அரசியலில் அதிமுக, திமுக என இருகட்சிகளில்தான் அதிகம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திமுகவில் மாவட்டத்தை  கடலூர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் உள்ளார். மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏவாக இருந்த கணேசன் உள்ளார். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தையும், தலித் சமூதாயத்தையும் சார்ந்தவர்களை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர. இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர்.  

ஆனால் தற்போது மாவட்டத்தை மூன்றாக பிரித்துள்ள அதிமுக மூன்று மாவட்ட செயலாளர்களையும் ஒரே சமூகத்தில் இருந்து நியமித்துள்ளனர். மாவட்டத்தில் 33 சதவீதத்திற்கு மேல் வசிக்கும் தலித் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஒருவரை கூட மாவட்ட செயலாளராக நியமிக்கவில்லை என்று அந்த சமூகத்தில் இருந்து அதிமுகவின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், கட்சியினர் என  பலர் நம்மிடம் ஆதங்கத்துடன் கூடிய வருத்ததுடன் பேசினார்கள்.

அதேபோல் சிறுபான்மை என்று சொல்லப்படுகிறவர்கள் மாவட்டத்தில் 15 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். அந்த சமூகதிலிருந்தும் ஒருவரை கூட நியமிக்கவில்லை என்றும் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் புலம்பி வருகிறார்கள்.

இதே அம்மா இருந்தா இப்படி நடக்குமா? என்ற கேள்வி எழுப்பியதுடன் சாதிய அடக்குமுறை அதிகமாக இருந்த காலத்திலும் ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்தபோது அம்மா தலித் சமூகத்தை சார்ந்தவரை மாவட்ட செயலாளராக நியமித்தார் என்பது குறிப்பிடதக்கது என்றனர். தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் கையில் கட்சி உள்ள நிலையில் கட்சியின் பதவி மற்றும் முக்கிய பொறுப்புகளில் சமூக நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.