Skip to main content

ஐந்து நாள் கழித்து சென்று ஐந்து நிமிட ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
pudukkottai



கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்குச் சென்றார். சேதமடைந்த இடங்களை அவர் ஆய்வு செய்வார் என்று இருந்த நிலையில் ஒரு சில இடங்களை அவர் பார்வையிட்டார்.


புதுக்கோட்டையில் ஐந்து நிமிடத்தில் முடிந்த அவரது ஆய்வின்போது, அவரது கட்சியினர் சிலரை மட்டும் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியுள்ளார் என்று அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி உள்ளிட்ட இடங்களில் மட்டும் எடப்பாடிபழனிசாமி ஆய்வு செய்தார். அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றைக்கூட ஆய்வு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

 

pudukkottai


மாப்பிள்ளையார்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மூதாட்டி, எந்த அதிகாரியும் எங்களை வந்து பார்க்கவில்லை. என் வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்து கிடக்கிறது. அதனை கீழே இறக்கிக்கூட போடவில்லை. ஐந்து நாள் ஆகிறது. ஐந்து நாள் கழித்து முதல் அமைச்சர் பார்க்க வருவதாக சொன்னார்கள். வந்தவர் அங்கேயே பார்த்துவிட்டு திரும்பி போய்விட்டார். எங்களை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. எங்களால் எட்டிக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தோம். இன்று ஆளும் கட்சி, ஆளாத கட்சி என்று கிடையாது. மக்கள் அனைவரும் கஷ்டப்படுகிறோம். ஆளும் கட்சி கவுன்சிலர் சிபாரிசின் பேரில் 30 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் பண்ணினோம். ஓட்டு நாங்களும் போட்டோம். எங்களுக்கும் அவர்கள் செய்தால் என்ன என்றார். 

செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதிகாரிகளும் அமைச்சர்களும் எடப்பாடியைத்தான் கவனிக்கின்றனர். எடப்பாடி வருகிறார் என்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக எங்களை ரோட்டில் நடக்கவிடவில்லை. கயிறை கட்டி மறைத்து நிற்கின்றனர் போலீசார். அவர்களை தாண்டி எங்களால் போக முடியுமா? அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். மக்களை அவர்கள் நினைக்கவில்லை. பாதுகாக்கவில்லை. 

மாப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த மற்றொரு மூதாட்டி, ரொம்ப கஷ்டப்படுகிறோம். பச்சை குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தவிக்கிறோம். ரேஷன் அரிசிக்குக் கூடவழியில்லை. புயலால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவது நாங்கள். எங்களை சந்திக்காமல் சென்றிருக்கிறார். பின்னர் எதற்காக இங்கு வந்தார் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.