Skip to main content

கர்நாடகாவில் ஆட்சிக்கவிழ காரணம் ஸ்டாலின் இராசி- எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் கே.வி குப்பத்தில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

கிராமத்தில் பசுமை புரட்சி இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு கறவை மாடுகளை கொடுத்த அரசு எங்களுடைய அரசுதான். அதேபோல் ஆடு வளர்ப்பு திட்டம். இன்று ஏழை எளிய தொழிலாளர்கள, விவசாய பெண் தொழிலாளர்கள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் நான் விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால் உங்கள் முன் விவசாயியாக இருந்து பேசுவது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

edappadi palanisamy election campaign


இன்றைக்கு ஸ்டாலின் என்னென்ன பொய்யெல்லாம் பேசுகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்யணும். எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?. இது என்ன பொதுத்தேர்தலா? இது பொதுத் தேர்தலாக இருந்தால் சொல்லலாம். 2021ல் ஒரு பொதுத் தேர்தல் வருகிறது, சட்டமன்ற பொதுத் தேர்தல் அந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் நீங்கள் சொன்னால் அது பரவாயில்லை. 234 தொகுதிகள் நீங்கள் மெஜாரிட்டி வந்து ஆட்சி அமைத்தால் நீங்கள் சொன்ன திட்டத்தை நீங்கள் நிறைவேற்றலாம். இது சட்டமன்ற இடைத்தேர்தல் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நீங்கள் எப்படி முழுவதும் வெற்றி பெற முடியும். இப்படி ஒரு பொய்யான வாக்குறுதிகளை இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, சொல்ல முடியாத நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அந்த பொய்யிலே பெற்ற வெற்றிதான் அந்த இடைத் தேர்தல் வெற்றி.

நேற்று கூட சொன்னார் 13 பெரியதா 9 பெரியதா என்று. ஒன்பதுதான் பெருசு ஏனென்றால் நீதி, நேர்மை, தர்மம் வென்றது. நாங்கள் உண்மையை சொல்லி ஓட்டு கேட்டோம். ஆனால் நீங்கள் அப்படி அல்ல பொய் சொல்லி ஓட்டுகளை ஏமாற்றி பெற்ற வெற்றி. நீங்கள் உண்மையை சொல்லி இருந்தால் ஒரு இடம் கூட வென்றிருக்க முடியாது. விவசாய கடன் தள்ளுபடி, ஒரு குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய், 12 மாதத்திற்கு 72 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பீர்கள், பணம் எங்கே இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த நாட்டினுடைய முழு பட்ஜெட்டையும் கொடுத்தால் கூட பத்தாது. அத்தனையும் பொய். இதை அடிக்கடி எல்லாக் கூட்டத்திலேயும் பேசி பேசி மக்களுடைய மனதில் பதிய வைத்து மாதம் 6000, 6000 என்று சொன்னதும் பரவாயில்லை 6 ஆயிரம் பணம் கிடைக்குது. 12 மாதத்திற்கு 72 ஆயிரம் ஆச்சு பரவாயில்லை ஒருமுறை ஓட்டு போட்டு பார்க்கலாம் அப்படி என்று அவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டார்கள் அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

திமுகவுடன் கூட்டணி வைத்ததால் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி. நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவை மாண்பை குறைத்தவர்கள் திமுகவினர். கர்நாடகாவில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சித்து பார்த்தது ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவின் தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. போகின்ற இடத்திலெல்லாம் நேற்று முழுவதும் என்னை பற்றி, எங்களுடைய கட்சியைப் பற்றி, எங்களுடைய ஆட்சியைப் பற்றி, எங்களை தனிப்பட்ட முறையில் பேசுகிறார். வேறு ஏதும் சொல்வதற்கு அவர்களுக்கு வழி இல்லை. எதைச் சொல்லி ஓட்டுக் கேட்கப் போகிறீர்கள். நாங்கள் சொல்கிறோம் இதை இதை செய்தோம் என உங்கள் முன்னே சொல்லிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் எதைச் சொல்லி ஓட்டு கேட்கபோகுறீர்கள் என்றார்.

முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி ,வீதியில் சட்டையை கிழித்துக் கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள் என மறைமுகமாகவும் ஸ்டாலினை விமர்சனம் செய்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.