Skip to main content

முதல்வர் குறித்து விமர்சனம் - வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கைது 

Published on 09/12/2018 | Edited on 09/12/2018
s

 

திருச்சியில் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் இன்று காலை புவனா என்பவர் கொடுத்த புகாரில்,  என்னுடைய கணவர் பெரியார் சரவணன் வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர். இன்று காலையில் என்னுடைய வீட்டிற்கு அடையாளம் தெரிந்த இரண்டு பேர் வந்து என் கணவரை தேடி வந்தார்கள். நான் அரசு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார் வந்திடுவார் என்று சொன்னேன். அதன் பிறகு எனது கணவரை காணவில்லை. மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த போது யாரோ ஒரு கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்தி சென்றிருக்கிறார்கள் என்று அங்கிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று இருந்தது. 

 

புகாரை பெற்றதும் ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் தலைமையில் அரசு மருத்துவமனைக்குச் சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையில் சென்னை திருவல்லிக்கேணி போலிசார் வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது உறுதியானது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எழுவர் விடுதலை குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக முதல்வர் மீது விமர்சனம் வைத்து பேசியதற்காக அவதூறு வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

''வைட்டமின் டி வேணாமா? வெயிலுக்கு வாங்க...''-செல்லூர் ராஜு கலகலப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 "Don't you want vitamin D.. to get sun..."-Sellur Raju Kalakalappu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், வெயிலுக்காக பயந்து ஓரமாக நின்றிருந்த கட்சி நிர்வாகிகளைப் பார்த்துப் பேசுகையில், ''நாங்க எல்லாம் வெயிலில் இருக்கிறோம். நீங்கள் மட்டும் நிழலில் இருக்கலாமா... இதெல்லாம் நியாயமாப்பா... வாங்கப்பா உடம்புக்கு வெயில் நல்லதுமா. இந்த நேரத்துல வைட்டமின் டி கூடும். என்ன டாக்டர் ''எனச் சொல்ல, அருகில் இருந்த சரவணன் தலையை ஆட்டினார். அதன் பிறகு பேசிய செல்லூர் ராஜு, 'எம்.எஸ் படிச்ச டாக்டரே சொல்லிவிட்டார் வாங்க வெயிலுக்கு'' என்றார்.

அதே பரப்புரை கூட்டத்தில் கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால் அதுவரை நடனமாடுங்கள் எனச் செல்லூர் ராஜு சொல்லிவிட்டார். உடனே 'கள்ளழகர் வாராரு' பாடல் போடப்பட்டது. அங்கிருந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.