தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று தென்காசி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும்போது போட்டியிடும் கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களியுங்கள் என்று தென்காசியில் பரப்புரை செய்தார். அடுத்து கடையநல்லூரில் பரப்புரையின் போது கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இரண்டு இடத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன எடப்பாடி பழனிசாமியிடம் வேட்பாளர் பெயர் டாக்டர் கிருஷ்ணசாமி என்று தெரியப்படுத்தப்பட்டது. அதன்பின் புளியங்குடி மற்றும் சங்கரன்கோவிலில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் வேட்பாளர் கிருஷ்ணசாமி என்றார்.