Advertisment

நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்; போலீசார் குவிப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

Advertisment

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

Advertisment

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (27.08.2024) நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி தற்போது எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு இரண்டாவது வழக்காக விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிமன்றத்தில் அவர் கொடுக்கும் பதிலையே அடுத்தே வழக்கின் போக்கு தெரியவரும். எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி உள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினரும் அதிமுக மாவட்டச் செயலாளர்களும் ஒன்று கூடி உள்ளனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

admk dhayanithi maran edappadi pazhaniswamy police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe