Skip to main content

"மவராசன் எம்.ஜி.ஆருக்கு அடுத்தது நீங்கதான்..." - பாட்டி பேச்சால் முதல்வர் எடப்பாடிக்கு இன்ப அதிர்ச்சி

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது தனது சொந்த ஊரான சேலத்திற்கு வந்து இரண்டு மூன்று நாள்கள் ரிலாக்ஸ் செய்துவிட்டு திரும்பி செல்வதை  வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் சென்ற 20 ஆம் தேதி சேலம் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.   சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த முதல்வர், 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்று அங்கு ஓரிரு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அப்படியே தனது தோட்டம் உள்ள சிறுவம்பாளையம் கிராமத்திற்கு சென்று உற்றார் உறவினர்களை சந்தித்து அதன் பிறகு மீண்டும் சேலம் வீட்டிற்கு வந்தார். 

 

e

 

தொடர்ந்து 22 ஆம் தேதி சேலத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் . அதேபோல் வி ஐ பி கள், சில அமைப்பு நிர்வாகிகள் யாரெல்லாம் தன்னை சந்திக்க விரும்பினார்களோ அவர்களை எல்லாம் வீட்டுக்கு அழைத்து தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டே சந்தித்ததும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதும் நடந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி கிராமத்திற்கு செல்லும் போது அந்த வழியில் காரை நிறுத்தி அங்கு நின்ற மக்களிடம் பேசினார்.

 

 அப்போது ஒரு மூதாட்டி ஒரு மனுவை எடப்பாடி பழனிச்சாமியிடம்  கொடுத்தார்.  அந்த மனு முதியோர் உதவித்தொகை மனு. அந்த பாட்டியிடம் பணிந்து குனிந்து பேசினார் முதல்வர் எடப்பாடி. அப்போது அந்த பாட்டி நம்ம ஊர் ஐயா வா  நீங்க.                  

                                                                                                                                                                                                     அந்த மவராசன் எம்ஜிஆருக்குப் பிறகு உங்கள தான் நேரில் பார்க்கிறேன் என கூற, நெகிழ்ந்து போன எடப்பாடி கொஞ்சம் திகைப்பிலும் ஆழ்ந்தார். இப்படித்தான் முதல்வர் எடப்பாடி தனது சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம் வழக்கமாக இதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள்  நடக்கும் படி அதிகாரிகள் கவனமாக செய்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தனது சொந்த வீட்டில் மாதத்தில் ஒரு முறையோ இரு முறையோ ரிலாக்ஸ் செய்யும்போது  தனது நெருங்கிய உறவினர்களான மாமன் மச்சான் பங்காளிகளுடன் இரவில் கதை பேசுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் பிடித்துப் போய் உள்ளது. சேலம் முகாமை தொடர்ந்து 23 ஆம் தேதி அன்று செவ்வாய்க்கிழமை சேலத்தில் இருந்து கிளம்பி நேராக  காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு அப்படியே அரசுப்பணியில் ஈடுபட சென்னை செல்லவிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.