லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.

Advertisment

admk

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி குடும்பம், சினிமா விநியோக பிஸ்னஸில் களமிறங்கியதோடு, ரஜினியின் "தர்பார்' திரைப்படத்தின் தென் மாவட்டங்களுக்கான வினியோக உரிமையை, கார்த்திகேயன், அரவிந்த் என்ற பெயர்களில் வாங்கியிருப்பதாக சொல்கின்றனர். இது அமைச்சர்கள் மத்தியிலேயே விமர்சனத்தை ஏற்படுத்த, எடப்பாடி தரப்போ, தி.மு.க. ஆட்சியில் கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பமும் சினிமாத்துறையில் ஈடுபடலையா? நம்ம தலைவி ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா தரப்பு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை நடத்தலையா? அதுமாதிரிதான் இதுவும் என நியாயப்படுத்தி பேசி வருவதாக சொல்கின்றனர்.