Skip to main content

மயக்கமடைந்த பள்ளி மாணவி... கட்டில் கடைக்கு வந்த சோதனை

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

"Do you know how all these colors come?" - The officer who seized the substandard snacks

 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவி திடீரென மயக்கமடைந்த நிலையில், பள்ளிக்கு வெளியில் இருந்த கடையில் இருந்த தரமற்ற தின்பண்டங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் பள்ளிக்கு வெளியில் உள்ள கடை ஒன்றில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ் ஒன்றை வாங்கி குடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற அந்த மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாணவியிடம் விசாரிக்கையில் காலை வகுப்பறைக்கு வருவதற்கு முன் பள்ளிக்கு வெளியில் உள்ள கட்டில் கடையில் ஜூஸ் வாங்கி குடித்தது தெரியவந்தது.

 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடை வைந்திருத்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செய்த ஆய்வில் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த பல தின்பண்டங்கள் கெட்டுபோய் கலவாதியாக இருந்தது தெரியவந்தது. ''கலர் கலராக இருக்க இது எல்லாம் கெமிக்கல் புரிகிறதா? எப்படி இந்த கலர் வருகிறது சிவப்பு, மஞ்சள், பச்சைனு எப்படி வருது. கெமிக்கல் பொடி போட்டால்தான் வரும் புரியுதா?'' என கட்டில் கடைக்கார பெண்மணியிடம் கேள்வி எழுப்பியவாறே, காலாவதியான பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பறிமுதல் செய்தார்.  மேலும் குளோப் ஜாமூன் இருந்த பிளாஸ்டிக் கப்பில் ஸ்பூனால் குளோப் ஜாமூனை எடுத்து தராமல் கைகளால் எடுத்து தந்ததை கண்டித்த அதிகாரி, தூய்மையாக திண்பண்டங்களை கையாள வேண்டும் என்று எச்சரித்து சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.