Skip to main content

ஈ.சி.ஆரில் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறிய போலீசார் ..! ஜோடியாக வருபவர்களிடம் வழிபறி?

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

தலைநகர் சென்னை சுற்றுவட்டார பகுதி கல்லூரி மணவர்களும் சரி, ஐ.டி இளசுகளும் சரி, நடுத்தரவாசிகளும் சரி காதல் ஜோடிகளாக ஜஸ்ட் ரிலாக்ஸ்சா ஒரு லாங் டிரைவ் போலாமா ..? என்று எண்ணும்போது மனதில் உதிப்பது ஈ.சி.ஆர் தான் ..!

காரணம் மல்டிபிக்ஸ் சினிமா தியேட்டர் முதல் காரிலே அமர்ந்துக்கொண்டு சினிமா பார்க்கும் தியேட்டர் முதல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ வைக்கும் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் துவங்கி டிரைவின் ஓட்டல், ரெஸ்சார்ட், கார்டன் ரெஸ்சார்ட் ஏன் நம் செல்ல பிராணிகளான நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளுக்கு கூட ரெஸ்டாரண்ட், ஸ்பா (பியூட்டிபார்லர் ) என அனைத்தும் உள்ளதால் அனைத்து தரப்பினராலும் விருப்பபடும் சாலையாக உள்ள  ஈ.சி.ஆர் உள்ளது.

 College students in ECR violating police .. Adoration of the couple


ஈ.சி.ஆரில் வார விடுமுறை நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயற்றுகிழமை என விடிய விடிய சாதாரணம் வாகனங்கள் முதல் விலை உயர்ந்த பைக், கார் என எல்லாவற்றையும் எளிதாய் பார்க்க முடியும்.

அதிலும் பெரும்பான்மையாக கல்லூரி மற்றும் ஐ.டி நிறுவன இளசுகள் வீக்கென்ட் பார்ட்டி என்ற பெயரில், விடிய விடிய சுற்றுவார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்துவது தொடர் கதையாகவே உள்ளது. இதனால் அந்த வார இறுதி நாட்களில் போக்குவரத்து போலீசார் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்று. 

சமீபத்தில் விலையுயர்ந்த காரில் அதிவேகமாக வந்தவர்களை ஈ.சி.ஆர் சாலை உத்தண்டி டோல்கேட்டில் மடக்கிபிடித்த நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் சௌந்தர்ராஜன் மீதே காரை ஏற்றிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. என்ன பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை. அதுவே ஓர் சாமானிய நடுத்தரவாசியாக இருந்தால், கைது செய்து அழைத்து செல்லும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டிருக்கும் ..!

 

ECR college student police


இந்த அத்து மீறல்கள் ஒருபுறம் இருக்க அதேசாலையில் வரும் காதல் ஜோடிகள், கல்லூரி மாணவர் மாணவிகளை வாகன சோதனை என்ற பெயரில் அபராதம் என்ற பெயரில் போக்குவரத்து காவலர் மெகா வசூலில் ஈடுபடுகிறார் என்ற புகாரும், அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. அபராத தொகையை, பணமாக வசூல் செய்யக்கூடது என்று ஸ்கிரீங் மெஷின் மூலமாக மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்ற சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் கட்டாய உத்தரவிட்டுள்ளார், ஆனாலும் அதை மீறும்  போக்குவரத்து போலீசாரின் அட்டூழியம் வழிபறி கொள்ளையர்களையே மிஞ்சும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை வீக்கென்ட் பார்ட்டியை முடித்துக்கொண்டு, ஜூம் கால் டாக்சி அதாவது (கார் மட்டும் வாடகைக்கு தருவார்கள் அதை நாம் ஓட்டிசென்று மீண்டும் நாமே விட வேண்டும் வாடகை சைக்கிள் போன்றது) வாடகை கார் ..!

 

POLICE

 

அந்தகாரில் ஞாயற்றுகிழமை அன்று வாடகைக்கு எடுத்த கல்லூரி மணவர்கள் மூன்று மாணவர்களும், இரண்டு மாணவிகளும் லாங் டிரைவ் சென்று பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் ஈ.சி.ஆர் சாலையில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள உத்தண்டியில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கம் அருகே யூ டர்ன் செய்தபோது, எதிர்பாராமல் எதிரே வந்த TN-19 2205 என்ற ஆட்டோ மீது மோத, ஆட்டோ கவிழ்ந்து, அதை ஓட்டிவந்த டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.  உடனே அவரை மீட்டு அருகே இருக்கும் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை முடித்து பின், விபத்தால் ஆட்டோவில் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்து தருவதாக மாணவர்கள் உத்திரவாதம் கொடுத்தனர்.  அதே வேளையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவலர் மதியழகனும் மற்றும் உடன் வந்த சீருடை அணியாத போலீசார் என்று அறிமுகம் ஆன இருவரும், மாணவர்கள் ஓட்டி வந்த வாடகை காரை பறிமுதல் செய்ததோடு, இந்த நேரத்தில் இரவு முழுவதும் ஆண் பிள்ளைகளுடன் விடிய விடிய எங்கு போய்வந்தீர்கள் என்றும், உங்கள் பெற்றோர் போன் நம்பர் கொடு என்றும், இல்ல கல்லூரி முதல்வர் போன் நம்பரை கொடு என்றும் மாணவிகளை பயங்கரமாக மிரட்ட..! 

ECR college student police

 

வீட்டுக்கோ அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கோ தெரிந்தால் மிக பெரிய பிரச்சனை ஏற்படும் சார்..! தயவு செய்து சொல்ல வேண்டாம் சார் ... எங்க படிப்பு, எதிர்காலமும் வீணாய் போகும் சார்... என்று மாணவர்கள் கெஞ்சியுள்ளனர்.. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்ட போலீசார் 
 

பயந்துபோன மாணவர்களிடம் இருந்த இருபது ஆயிரம் ரூபாயை பிடிங்கியுள்ளனர், மேலும் அத்துடன் விடாமல் மாணவிகளிடம் தோள் மீது கையை வைத்து தடவியபடி பேசிய சீருடை அணியாத போலீஸ் '' நைட் லாம் என்ன பண்ணீங்க..?  எங்க தூங்கினீங்கனு ...? மேலும் மதியம் வா... அப்போதான் கார் கிடைக்கும் என இரட்டை அர்த்ததில் பேசியுள்ளார். அந்த போலீஸ்..  
 

நல்ல வேளையாக மாணவர்களுக்கு தெரிந்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.சேகர் என்பவர் அங்கு வர பேசி மாணவர்களை மீட்டுள்ளார். மேலும் அங்கிருந்த போலீசாரிடம் "பாதிக்கப்பட்டவர் புகார் கூட தராமல் எப்படி மாணவர்களை மிரட்டுவீர்கள் என கேட்டுள்ளார். மேலும் விபத்து என்றால் சம்மந்தப்பட்ட மாணவனிடம் லைசன்ஸ் உள்ளதா ..? டி.டி (மது போதையானு )யானு செக் பண்ணுங்க வழக்குப்போடுங்க...? என்று சரமாரி கேள்வி எழுப்ப மாணவர்களை விடுவித்துள்ளனர் அந்த போலீசார்.

பின்னர் தனியாக வந்த மாணவர்கள் தாங்கள் மிரட்டப்பட்டதும், பின்னர் பெற்றோரிடமும் கல்லூரியிலும் நடந்த சம்பவத்தை சொல்லுவோம் என்று மிரட்டி, அபராதம் என்றும் இருபது ஆயிரம் ரூபாயை பிடிங்கி சென்றதையும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் அத்துமீறிய போலீசாரை பற்றி கூறவே கோபம் அடைந்த பொன்.சேகரன் நமக்கு நடந்த தகவலை கூறினார்.

 

ECR college student police


நடந்த சம்பவத்தை பற்றிகேட்க சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தை தொடர்பு கொண்டோம். சம்பவத்தில் தொடர்புடைய போக்குவரத்து காவலர் மதியழகன் பேசினார். நடந்த சம்பவத்தை பற்றி கேட்டோம், அவரோ "சார் வண்டிய வந்து எடுத்துட்டு போக சொல்லுங்க, விசயத்தை பெருசாக்க வேணாம்'' என சொன்னார். பணம் ஏன் வசூல் செய்தீர்கள், வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை என்று கேட்தற்கு அவரோ பதில் கூறாமல் சைலன்டாக தொடர்பை துண்டித்தார். சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ஷோபனாவை தொடர்பு கொண்டோம் போன் எடுக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை மாநகர கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) அருணை பலமுறை தொடர்பு கொண்டும் செல் போனை எடுக்கவில்லை.

மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய போலீசாரே சீருடை அணிந்து வழிபறி கொள்ளையர் போன்று வசூலிலும், வேட்டையிலும் ஈடுபட்டால் இந்த நாட்டில் யாரை அடையாளம் காண்பது ..?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.