Skip to main content

ரம்ஜான் எதிரொலி: களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Echoes of Ramadan: Kundarappally market with weeds; Goats for sale for Rs 10 crore in one day!

 

ரம்ஜான் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறி, மசாலா பொருள்கள் விற்றாலும் ஆடு விற்பனைக்கு பிரசித்தி பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 29) அன்றும் வாரச்சந்தை கூடியது. 

 

வரும் மே 3- ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை குறி வைத்து, கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

 

உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆடுகளை வாங்க வியாபாரிகள், இறைச்சிக் கடைக்காரர்கள் குவிந்தனர்.

 

அதிகாலை 05.00 மணி முதலே சந்தை களைகட்டத் தொடங்கியது. 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ஒன்று 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. எடை மற்றும் வயதுக்கு ஏற்றபடி ஆட்டின் விலை குறைந்தபட்சம் 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 

 

வெள்ளை ஆடு, பள்ளை ஆடு, கருப்பு ஆடு, தலைச்சேரி, செம்மறி ஆடுகள் என அனைத்து வகை ஆடுகளுக்கும் கடும் கிராக்கி நிலவியது. குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

 

ஆடுகளுக்கும் கூடுதல் விலை கிடைத்ததால் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.