Advertisment

தொடர் மழை எதிரொலி... 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 Echoes of continuous rain ... Holidays for schools in 18 districts!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், மழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில்பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (08.11.2021), நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர் ஆகிய 9மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

college rain school weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe