Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி:வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு... நக்கீரனுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!!    

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

கடந்த 24-ந்தேதி ''கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போகுதே'' -வேதனை கண்ணீரில் விவசாயிகள்!! என்ற தலைப்பில்  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நார்க்கரவந்தன்குடி, சித்தலப்பாடி, பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் பயிர் செய்துள்ளனர்.  நெற்பயிர்கள் அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள்  முற்றியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்திருந்த விவசாயிகளுக்கு பெரிய இடியாக நெற்கதிர்களில் மஞ்சள் பழ கட்டிபோன்ற பூஞ்சைகள் தாக்கியுள்ளது. இதனால் வயல்களில் 1 ஏக்கருக்கு 40 சதவீதம் வரை நெற்கதிர்கள் வீணாகியதை  விவசாயிகள் வேதனையுடன் முதன் முதலில் நக்கீரன் இணையத்தில் பதிவு செய்யப்பட்டது.

 

 Echo of Nakkeeran's message; Farmers thanking Nakkeeran

 

அதனை தொடர்ந்து இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த தொலைகாட்சி செய்தி ஊடகங்கள் அங்குள்ள பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்தது. இதனால் அரசின் விவசாயதுறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கனவத்திற்கு சென்றதால் விவசாய துறை அதிகாரிகளை சம்பந்தபட்ட வயலுக்கு சென்று அய்வு செய்து அறிக்கை அனுப்பும் படி உத்திரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட மீதிகுடி கிராமத்திற்கு கடலூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் முருகன், கரும்பு ஆராய்சி பூச்சியல்துறை உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை உதவி இயக்குனர் விஜயராகவன்,வேளாண் அலுவலர் ரமேஷ், உதவி அலுவலர்கள் சிவசங்கரன், மச்சேந்திரன் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட நெல்வயலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

 

Echo of Nakkeeran's message; Farmers thanking Nakkeeran

 

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணைஇயக்குநர் முருகன் இதனை கடந்த காலங்களில் நெற்பழம் என்று கூறுவார்கள். மகசூல் அதிகம் உள்ளபோதும் பருவ நிலை மாற்றத்தாலும் வயல்களில் ஈரப்பதம் இருந்து கொண்டு இருந்தால் இதுபோன்று வரும். இது காற்றில் பரவகூடிய பூஞ்சை நோய் (பால்ஸ்மொட்). இது வைரஸ் நோய் அல்ல. இதனால் அதிக பாதிப்பு ஏற்படாது என்று கூறிய அவர் இந்த வாரத்தில் இதனால் மனவேதனை அடைந்துள்ள விவசாயிகளை அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த நோய்குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறினார்.

 

Echo of Nakkeeran's message; Farmers thanking Nakkeeran


வேளாண்அதிகாரிகள் ஆய்வு குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில் வந்தவர்கள் எங்களை சமாதனம் செய்யும் நோக்கில் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பாதிக்குமேல் பாதிப்பு உள்ளது. இதனை அவர்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் நக்கீரன் செய்தி உள்ளிட்ட ஊடகங்கள் இல்லை என்றால் இந்த பகுதியை யாரும் திரும்பி பார்த்திருக்கமாட்டார்கள் எனவே இந்த செய்தியை உலகிற்கு காட்டிய ஊடகத்திற்கு மிக்க நன்றி என கனத்த இதயத்துடன் கூறினார்கள் நமக்கு சோறுபோடும் விவசாயிகள்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.