கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தை ஒட்டி தமிழ்நாடு எல்லையில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி, நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சோதனைச் சாவடிகளில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். கத்தனல்லா சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர், நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கோழிகள், பறவைகள் மற்றும் அதற்கான தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.