Skip to main content

இதை செய்தால் மீட்பது எளிது - ஆன்லைன் பணம் திருட்டு குறித்து சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

Easy to recover if reported within 24 hours-Cybercrime alert regarding online money theft!

 

நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பரசு என்பவரிடம் ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய்  திருடப்பட்ட நிலையில் 24 மணிநேரத்தில் பணத்தை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பது தொடர்பாக போலீசார் விளக்கமும் கொடுத்துள்ளனர்.

 

ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அன்பரசு 50 லட்சம் ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வைப்பு தொகையாக டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அந்த தொகையை வங்கி நிர்வாகம் வைப்பு தொகையில் இருந்து சேமிப்பு தொகையாக மாற்றியுள்ளது. ஆனால் அதை மீண்டும் வைப்பு தொகையாக மாற்ற வேண்டும் என முயற்சி செய்துகொண்டிருந்த அன்பரசுவுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படுவதாக நேற்று செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

 

Easy to recover if reported within 24 hours-Cybercrime alert regarding online money theft!

 

அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்த அன்பரசு லாகின் செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வர ஓ.டி.பி எண்ணை அந்த மர்ம நபரிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இறுதியில் அந்த அழைப்பு குறித்து சந்தேகம் அடைந்த நிலையில் அன்பரசு செல்போனை அவரது மகனிடம் கொடுத்து சோதனை செய்தபோது, 6 தவணையாக அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ந்து போனார்.

 

இதுகுறித்து உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 53 லட்சம் ரூபாயும் திருடப்பட்ட நபரின் கணக்கு செல்லாமல் தடுத்து பணத்தை பாதுகாத்துள்ளனர். ஆன்லைன் மூலம் இது போன்று வங்கி மோசடி திருட்டுகள் நடைபெறுவதால் தேவையற்ற குறுந்தகவல்களை திறப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர், பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். அப்படி 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்கும் பட்சத்தில் பணத்தை மீட்பது எளிது எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.