இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துக் கொண்டனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வுகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.