Advertisment

அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து; 4 பேர் உயிரிழப்பு

An early morning accident; 4 people lost their lives

செங்கல்பட்டு அருகே ஆம்னி பேருந்து, லாரி, அரசு பேருந்து என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி மற்றும் ஆம்னி பேருந்து அரசு பேருந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதிகாலையில் ஏற்பட்ட இந்த கோர சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

accident Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe