Skip to main content

“என்.எல்.சியிடமிருந்து விவசாயிகளையும் மக்களையும் காப்பாற்றுவது தான் அரசின் கடமை” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

 duty of the government save farmers from NLC says Premalatha Vijayakanth

 

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என  வலியுறுத்தியும்,  விளைநிலங்களை இயந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சியை கண்டித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் பாகுபாடின்றி அனைத்து மகளிருக்கும் வழங்கக் கோரியும், விலைவாசி உயர்வைக் குறைக்காததைக் கண்டித்தும்  கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

விருத்தாசலம் பாலக்கரை உழவர் சந்தை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க வடக்கு மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன உரையாற்றினார். 

 

அவர் பேசுகையில், “தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் என்.எல்.சியை கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளின்படி அனைத்து மகளிருக்கும் ரூபாய் 1000 வழங்க வேண்டும். ஆனால் தற்போது தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் முதல்வர் தேர்தலுக்கு முன்பு இவ்வாறு கூறினாரா? அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்காவிட்டால் அனைத்து மகளிரையும் திரட்டி தி.மு.க அரசுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். நான் விருத்தாசலம் போராட்டத்தில் பங்கேற்கக் காரணம் என்.எல்.சி பிரச்சனை. என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலங்களைப் பிடுங்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

 

நீதியரசர் கூறியது போல அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகளை அழித்ததைப் பார்த்த போது வேதனையாக இருந்தது. விளைநிலங்களை அழிப்பதை நிறுத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி வீடு, நிலம், வேலை வழங்கிட வேண்டும். மக்களுக்காகத் தான் அனைத்து திட்டங்களும். மக்களை எதிர்த்துக் கொண்டு வரும் திட்டங்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அதனால் மக்களையும் இந்த நாட்டையும் காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். திறந்து விடாததால் இன்று 5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வறண்ட பூமியாக மாறி வருகிறது.

 

ஆனால் கூட்டணிக்காக பெங்களூர் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், காவிரி பிரச்சனை குறித்து எதுவுமே பேசாமல் திரும்பி வந்துள்ளார். அதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தரவேண்டிய நியாயமான தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் சார்பில் நாங்கள் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். டெல்டா கடைமடை வரை சிறந்த பூமியாக மாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை. பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை உரிய நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பார்” என்றார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர்கள் ராஜாராம், பாலு, மாவட்டப் பொருளாளர்கள் தென்னவன், ஏ.பி.ராஜ் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வேல்முருகன், பாலுசந்தர், ராஜ வன்னியன், இளவரசன், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் கருணா நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.