Skip to main content

வேலூர் தேர்தல்;வெற்றிபெற்றும் துரைமுருகன் அதிருப்தி!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தொகுதியில் அதிமுக சின்னத்தில் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார்.

இருதரப்பும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இந்த தொகுதிக்கான தேர்தலில் சாதி பிரதான இடம் வகித்தது. போட்டியிட்ட இருவரும் தான் சேர்ந்த சமூகத்தின் ஓட்டுக்களே தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு பலமாகவுள்ளனர். இதனால் இருவரும் தங்கள் சமூகத்தை சேர்ந்த வாக்குகளை கவர சிறப்பு கவனம் செலுத்தினர்.

 

Durumurugan dissatisfied in winning Vellore election!

 

ஏ.சி.சண்முகம், தனது சமூகம் சேர்ந்த சிறு சிறு அமைப்புகளை அழைத்து அடிக்கடி ரகசியம் கூட்டம் போட்டு பேசினார். இதில் வேலூர் மத்திய மாவட்டம், குடியாத்தம் நகர நெசவாளர் அணியின் துணை அமைப்பாளர் சி.என்.தட்சணாமூர்த்தி உட்பட சில திமுக பிரமுகர்கள் சமூக பாசத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, சமூகத்திற்கு முக்கியத்துவம் தந்து வேலை செய்யுங்கள் என ஏ.சி.எஸ் கேட்டுக்கொண்டதால் திமுகவை சேர்ந்த சில பிரமுகர்கள், தாங்கள் இருக்கும் கட்சிக்கு துரோகம் செய்யும் விதமாக சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தனர்.

இது தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகின. இதில் நெசவாளர் அணி தட்சணாமூர்த்தி, ஏ.சி.எஸ் நடத்திய ரகசிய கூட்டத்தில் கலந்துக்கொண்டதும், சாதி சங்க கூட்டத்தில் இதே தட்சணாமூர்த்தி, அந்த சங்கத்தின் முக்கிய பிரமுகராக கலந்துக்கொண்டு ஏ.சி.எஸ்க்கு ஆதரவாக பேசியதை அப்பகுதி திமுகவினர் துரைமுருகன் கவனத்துக்கொண்டு சென்றனர்.

தேர்தல் முடிந்து திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றும் எம்.பியாகியுள்ளார். ஆனால் 8 ஆயிரம் சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை துரைமுருகனால் பொருத்துக்கொள்ள முடியவில்லை, திமுக தலைவர் ஸ்டாலினும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Durumurugan dissatisfied in winning Vellore election!

 

இதனால் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என கட்சியில் நிர்வாகிகளாக உள்ள சிலரின் பெயர்களை துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலினிடம் எழுதி தந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இருந்த சி.என்.தட்சணாமூர்த்திதான் தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன் இந்த பட்டியலை தலைவரிடம் தந்ததும், இதுப்பற்றி வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏவிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அவர் ஒப்புதலுக்கு பின்பே தட்சணாமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நீக்கல் உத்தரவு செப்டம்பர் 7ந்தேதி வெளியானது. இதனைப்பார்த்து துரைமுருகன் அதிருப்தியானதாக கூறப்படுகிறது. காரணம் அவர் எழுதி தந்தவர்களில் முக்கியமான சிலரை நீக்கவில்லை எனச்சொல்லப்படுகிறது.

அதேபோல், ஏப்ரல் மாதம் தனது வீட்டிலும், ஆதரவாளர்கள் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு செய்ததுக்கு பின்னால் சொந்த கட்சியினரே உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை திமுக தலைவரிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வருத்தத்தில் உள்ளார் என்கிறார்கள் வேலூர் திமுகவினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.