Skip to main content

“ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட 330 ஏக்கர் நிலத்தில் தற்போது 24 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளது” - அமைச்சர் சேகர் பாபு! 

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
During the British rule, 330 acres of land was allotted and now there are only 24 acres

 

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (10.07.2021) திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தன்னுடைய தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அறநிலையத்துறையில் தொடர்பான எல்லா பணிகளும் மிக சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளையும் முதல்வர் கூர்ந்து கவனித்து அதனை முறைப்படுத்தி செயல்படுத்திவருகிறார் என்றும் கூறினார். மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் அமைச்சர் கே.என். நேரு, ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோவிலின் கோசாலைக்கு வரக்கூடிய பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கோவில் வளாகத்திற்குள்ளேயே ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து கூடுதலாக வரக்கூடிய பசுக்களை அங்கு வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தற்போது பயன்பாட்டில் உள்ள கோசாலையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரித்திட அனைத்துப் பணிகளும் தற்போது செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், கோவில் திருப்பணியாளர்களுக்கு, மற்ற தொழிலாளர்கள், ஓதுவார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களில் ஐந்து வருடத்திற்கு மேல் பணியாற்றிவருபவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். மேலும், இவர்கள் நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு மீதம் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் முறையாக நிரப்பி, திருப்பணிகள் மிகச்சிறப்பாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் கோவில்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் சிலைத் திருட்டு என்பது அதிகளவில் நடந்துள்ளது. பல இடங்களில் சிலைகளை மாற்றி வைத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை தற்போது பாரபட்சமின்றி, தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அந்த வழக்கு விசாரணையை விரைவில் முடித்துவைப்போம் என்றும் தெரிவித்தார்.

 

During the British rule, 330 acres of land was allotted and now there are only 24 acres

 

ஸ்ரீரங்கத்தில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய இந்த அடிமை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 1890களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீரங்கத்திற்கு சொந்தமாக கிடைத்த 330 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமாக 24 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளது. மற்ற இடங்களில் குடியிருப்புகள் கடைகள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வந்து அதில் குடியேறியுள்ளனர். அதேபோல் இந்தக் கோவிலைச் சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைப்பதாக கூறி, அனைத்து பொதுமக்களும் கோவிலுக்கு வாடகைதாரர்களாக மாற வேண்டும். முறையாக கோவிலுக்கு சேர வேண்டிய வாடகையை செலுத்திவிட்டால் கோவில் திருப்பணிகளுக்கான எல்லா வளர்ச்சியும் நடைபெற அது உதவியாக இருக்கும். இது சம்பந்தமாக தொடரப்பட்டிருக்கக்கூடிய வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

அதேபோல் மலைக்கோட்டை பகுதியில் மலை கோட்டையைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் நிச்சயம் அரசு கையகப்படுத்தி, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை எப்போதும் தயாராகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், கோவில் திருப்பணியாளர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே முதலில் அந்த ஓய்வூதியர்களுக்கான பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையையும் அதேபோல் அந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தொடர்பான ஆலோசனையை முதல்வரோடு கலந்தாலோசித்து விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களில் வழங்கப்பட்டுவந்த அன்னதானமானது நோய் தொற்றால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில்களில் பொட்டலங்களாக தற்போது அன்னதானம் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. எனவே விரைவில் நோய்த்தடுப்பு முற்றிலும் குறைந்து தமிழகம் முழுமையாக அதிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது கோவில்களிலேயே அன்னதானம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.