Skip to main content

பிள்ளையார்பட்டி ஆலயத்தில் துர்கா ஸ்டாலின்!(படங்கள்)

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 

        கணவருடைய கொள்கை வேறு.! தன்னுடைய கொள்கை வேறு என ஆன்மிக பயணத்தில் வளைய வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா வெள்ளிக்கிழமையன்று பிள்ளையார் பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

d

   

 கடவுள் மறுப்புக் கொள்கையுடைய திராவிடப் பாரம்பரிய கட்சித் தலைவரின் மனைவியாக இருந்தாலும் தன்னுடைய கணவன், குடும்பத்தாருக்காக ஆன்மிக விசயங்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு கோவில், குளம், கோ பூஜை என வலம் வருபவர் துர்கா ஸ்டாலின்.

d

 

வெளியில் கடவுள் மறுப்பு என முழங்கினாலும் தன்னுடைய மனைவி துர்காவின் ஆன்மிக விவகாரங்களில் தலையிடுவதில்லை திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்திற்கு வந்தவர் சுவாமி தரிசனம் செய்தவர் கோவிலின் வெளியே நின்ற பசுமாட்டையும் தொட்டு வணங்கினார்.

d

     

கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் பிச்சைகுருக்கள் வரவேற்க, பிள்ளையார்பட்டியின் நகரத்தார்களோ, "கற்பக விநாயகர் புகைப்படம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை துர்கா ஸ்டாலினுக்கு வழங்கினர். இதே வேளையில், கோவிலுக்கு சுவாமி கும்பிட வந்தவர்கள் துர்கா ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி வீட்டு நவராத்திரி விழாவில் அரசியல் தலைவர்கள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

 

 

இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழா, இந்தாண்டும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் பிரம்மாண்டமாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. லதா ரஜினிகாந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகை மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

“அன்று உங்க பாட்டிக்காக சாப்பிட்டேன்..” - துரை வைகோவிடம் துர்கா ஸ்டாலின் சொன்ன ஃபிளாஷ்பேக்

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Durga Stalin and Durai Vaiko met

 

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சமீபத்தில் திருவெண்காடு கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்றிருந்தார். அதே நேரம், ம.தி.மு.க.வின் தேர்தல் பணிச் செயலாளர் செந்தில் செல்வனின் தாயார் படத்திறப்பு விழாவுக்காக துரை வைகோ மயிலாடுதுறை சென்றிருந்தார். 


திருவெண்காட்டுக்கு துர்கா ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்து துரை வைகோ, அவரை சந்திப்பதற்காக திருவெண்காடு சென்றார். அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற துர்கா ஸ்டாலின், வைகோவின் உடல்நலம் குறித்து கனிவாக விசாரித்திருக்கிறார். அப்போது துரை வைகோ, “எங்கள் கலிங்கப்பட்டி வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும்” என்று துர்கா ஸ்டாலினை அழைத்துள்ளார். 


அதற்கு துர்கா ஸ்டாலின், “நான் ஒருமுறை உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாட்டிம்மா செய்யும் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளைச் சாப்பிடாத நானே, அன்று பாட்டிம்மாவுக்காக சாப்பிட்டேன்” என்று பழைய நினைவைப் பகிர்ந்திருக்கிறார்.