Skip to main content

“கர்நாடகாவில் நீர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு தர முடியவில்லை” - ரஜினிகாந்த்தின் சகோதரர் கருத்து

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

'Due to lack of water in Karnataka, Tamil Nadu could not be supplied' - Rajinikanth's brother comments

 

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் இன்று தரிசனம் செய்ய வந்தார். ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததற்கும், வெளியாக உள்ள லால் சலாம் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் அவர் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டார்.

 

சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் கருணையால் படம் வெற்றி அடைந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை. அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இல்லை. ரஜினியின் நடிப்பில் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் 19ம் தேதி தொடங்குகிறது. ஜெயிலரை விட லால் சலாம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். படம் நன்றாக வந்திருப்பதாக மகள் (ஐஸ்வர்யா) கூறியிருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் நிதி கொடுப்பார், எவ்வளவு கொடுப்பார் என்பது அவருக்கு தான் தெரியும்.

 

தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது பற்றி அரசியல்வாதிகள் தான் பேசுவார்கள். ரஜினிகாந்த்துக்கு சம்பந்தமில்லை. கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை, அதனால் தரவில்லை'' எனக் கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பெண் நிர்வாகியை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட பாமக நிர்வாகி  

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

 A BAMAK executive posted a bad picture of a DMK woman executive

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்க அரசின் சிப்காட் அலகு மூன்று தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக போராடி வந்தனர்11 கிராம விவசாயிகள். அதில் முக்கியமான 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் கடலூர்,  புழல், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

 

இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். தொடர்ச்சியாக விவசாய சங்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஏழு பேரில் ஆறு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

 

மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைப்பதை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உட்பட சில விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மேல்மா கிராமத்திற்கு பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்து இந்த மக்களோடு நாங்கள் துணை நிற்போம் என பேசினார். அதேபோல் ஆளுங்கட்சியான திமுக  சிப்காட் வேண்டும் என சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கோரிக்கை கூட்டம் நடத்தியது. இக்கூட்டம் தொடர்ச்சியாக ஒரு நாள் முழுவதும் நடைபெற்றது. மேல்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியினர் திமுகவை விமர்சிப்பதும் பதிலுக்கு திமுகவினர் பாமகவினரை விமர்சிப்பதும் நடந்து வருகிறது.

 

nn

 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளராக பெண் ஒருவர் இருக்கிறார்.. இவர் சிப்காட் விவகாரத்தில் திமுக சார்பாக தனது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். இதில் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் செய்யும் பாமகவையும் விமர்சித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாமகவை சேர்ந்த சிலர் அவரை சமூக வலைதளத்தில் மிக மோசமாக விமர்சித்து உள்ளனர்.

 

வந்தவாசியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாரின் ஆதரவாளர் எனக் கூறப்படும் சாலவேடு பாபு என்கிற ஒன்றியக்குழு கவுன்சிலர் சமூக வலைதளத்தில் திமுக பெண் நிர்வாகியின் புகைப்படங்களோடு மிக மோசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். மேலும் அவரை  செல்போனில் தொடர்பு கொண்டு சாலவேடு பாபு பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த திமுக பெண் நிர்வாகி வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பிணையில் விடுதலையான விவசாயிகள்; மாலை அணிவித்து வரவேற்ற சமூக அலுவலர்கள் 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Social workers welcomed the bailed farmers with garlands

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்க அரசின் சிப்காட் அலகு மூன்று  தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக 11 கிராம விவசாயிகள் போராடி வந்தனர்.  அதில் முக்கியமான 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  மற்றவர்கள் கடலூர், புழல், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. 

 

இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர் தொடர்ச்சியாக விவசாய சங்கர்களும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஏழு பேரில் ஆறு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கூறியிருந்தார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது அதனைத் தொடர்ந்து நீதிபதி 20 விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

வேலூர் சிறையில் இருந்த சதாசிவம், மாசிலாமணி, அண்ணாமலை, பாபு, பாக்யராஜ், பெருமாள், பாலாஜி, சுந்தரமூர்த்தி, ராஜதுரை, வெங்கடேசன், முருகன், விஜயன், திருமலை, துரைராஜ், அன்பழகன் ஆகிய 15 விவசாயிகளும் வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வந்தனர். இதில், மாசிலாமணி, பாக்கியராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்து பின்பு முதல்வரால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்ற சிறையில் உள்ள விவசாயிகளும் பிணையில் வெளியே வந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்