Skip to main content

ஆதரவற்ற சிறுவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்த துபாய் தமிழர்! 

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் வசித்து வருபவர் அன்வர் அலி. இவர் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். துபாய் தி.மு.க. அணியில் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து திருச்சி வந்த அன்வர் அலி, கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் நடத்தப்பட்டு வரும், அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள 50- க்கும் மேற்பட்ட சிறுவர்களை, அருகில் உள்ள ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றார். 

 

அதைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு தேவையான புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தார். குறிப்பாக, மாணவர்கள் தேர்ந்தெடுக்க ஆடைகளையே வாங்கிக் கொடுத்துள்ளார். தற்போது, இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில், வரும் மே 2- ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. அதனால், ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுத்ததாக அன்வர் அலி தெரிவித்தார். 

 

பின்னர் சிறுவர்களுடன் குழு புகைப்படத்தையும் அன்வர் அலி எடுத்துக் கொண்டார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள்” - விஜய்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay ramzan wishes

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம் மற்றும் கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், சமூக வலைத்தளப்பக்கம் வாயிலாக ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

த.வெ.க எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் சார்பாக பகிர்ந்துள்ள பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.