Skip to main content

என் நெஞ்சில் கை வைத்தார் டி.எஸ்.பி..! புகார் கூறி மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் எஸ்.ஐ..!!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

 " பெண் என்றும் பாராமல், வேண்டுமென்றே என் நெஞ்சின் மீது கையை வைத்துத் தள்ளினார் அந்த டி.எஸ்.பி.. அவர் டி.ஜி.பி.அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது காவல்துறை." எனப் புகார் கூறியதோடு மட்டுமில்லாமல், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி சிகிச்சைப் பெற்று வருகிறார் திருச்செந்தூர் காவல் நிலைய பெண் எஸ்.ஐ. ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வருபவர் சத்யபாமா. 2011ம் பேட்ஜ் அதிகாரியான இவர் அருகிலுள்ள குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசராத் திருவிழாவில் 17/10/2018ம் தேதி முதல் கோவிலின் மூலஸ்தானப் பகுதிக்கான பாதுகாப்புப் பணியினை கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 20/10/2018 அன்று இரவு 11.30 மணியளவில், சென்னை டி.ஜி.பி.அலுவலகத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரியும் முத்துக்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன், உள்ளூர் தனிப்பிரிவு ஏட்டையா வெலிங்டன் துணையுடன், பக்தர்கள் வெளியேறும் வரிசை வழியாக மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம் செல்ல முயற்சிக்க, அங்குப் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.ஐ.சத்யபாமா தடுத்து விசாரித்து விட்டு அனுப்பியிருக்கின்றார். அதன் பிறகு சுவாமி தரிசனம் முடித்து வெளியேறிய டி.எஸ்.பி.முத்துக்குமார், " என்னை தடுக்கிற அளவிற்கு நீ பெரிய ஆளா..?" என ஆரம்பித்து எஸ்.ஐ.க்கும், டி.எஸ்.பி.மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பும் ஏற்பட்டது. தேவஸ்தான ஊழியர்களும், பொதுமக்களுமாக சேர்ந்து இவர்கள் இருவரையும் சமாதானம் செய்து, டி.எஸ்.பி.யை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இச்சம்பவம் நடந்து முடிந்த அதே தினத்தில், குலசேகரப்பட்டிண காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.யான முத்துக்குமார் அளித்துள்ள  புகாரில் " அன்றையப் பொழுதில் வரிசையில் வந்த பக்தர்களை சராமரியாக திட்டிக் கொண்டே இருந்ததால், அவரிடம் நான் இன்னார்.! என அறிமுகம் செய்து கொண்டு பேச்சுக் கொடுத்தால் அமைதியாவார் என்ற நம்பிக்கையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் எங்கு வேலைப் பார்க்கிறார் என்பதை கேட்டேன். அவரோ, " உனக்கு ஏன்டா சொல்லனும்..?" என சகட்டுமேனிக்கு திட்டினார். சுவாமிக் கும்பிட்டு வரும் போதும் என்னை திட்ட, எனது குடும்பத்தாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அப்பொழுது கூட்டமும் அதிகமாக இருந்ததால் என் கையிலிருந்த விபூதி அவர் மீது கொட்டி விட்டது. அவ்வளவு தான்.!! கோபமடைந்து பைத்தியம் போல் கத்தத் தொடங்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"  எனக்கூறியுள்ளார்.

ஆனால், " அவர் எதிர்ப் பாதையில் வந்ததால் தான் இந்த பிரச்சனையே நடந்தது. சுவாமி தரிசனம் முடித்து வந்த வேகத்திலேயே என் நெஞ்சின் மீது கை வைத்து எட்டித் தள்ளினார். அப்படியே நிலைகுலைந்து உண்டியல் மீது விழுந்தேன். அத்தோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் அந்த டி.எஸ்.பி.. இதற்கு சாட்சி என்னுடைன் பணியில் இருந்த பியுலா செல்வக்குமாரி, முத்துமாலை உள்ளிட்ட பெண்காவலர்களும், கோவில் பணியாளர்களும். இது அப்படியே அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. ஆகவே, இப்பிரச்சனைக்கு காரணமான டி.எஸ்.பி. முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதிப்புக்குள்ளான பெண் எஸ்.ஐ.சத்தியபாமாவும் புகார் கொடுத்துவிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இரு தரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே சக காவலர்களின் கோரிக்கை. ஆவண செய்வாரா எஸ்.பி..?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் காவலருடன் தனிமையில் இருந்த டி.எஸ்.பி; கையும் களவுமாக பிடித்த உறவினர்கள்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Nagapattinam DSP accused of misbehaving with female constables

திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே பெண் காவலர் ஒருவரும் ஆண் காவலர் ஒருவரும் தவறாக நடந்து கொண்ட  சம்பவம் பேசு பொருளாக மாறிய நிலையில்,தற்போது இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வாரத்தில் திருச்சி ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஏட்டுடன், நாகப்பட்டினம் டவுன் டி.எஸ்.பியாக இருக்கும் பாலகிருஷ்ணன் தனிமையில் இருந்ததுள்ளார். அப்போது பெண் போலீஸின் உறவினர்கள் இருவரையும் கையும் களவுமாக வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்த போது, நாமக்கலைச் சேர்ந்த டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றும் போது ஆயுத படையில் பணியாற்றிவரும் பெண் போலீஸுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாலகிருஷ்ணன் நாகைக்கு மாற்றப்பட்டு டவுன் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் போலீசை டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் நாகைக்கு அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக தங்கியிருந்து விட்டு பின்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளனர்.

வழியில் அவர்களை பிந்தொடர்ந்த பெண் போலீஸின் உறவினர்கள், பாபநாசம் அருகே இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு குற்றவாளியை பிடிக்க வந்திருப்பதாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் பெண் போலீஸின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு கையும் களவுமாக பிடிப்பதற்காக இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிடு கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.எஸ்.பி பாலகிருஷ்ணனை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளிடம்  இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம், இதில் நீங்கள் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று கடுமையாக நடந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு உயர் அதிகாரியிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இந்த வழக்கை கையில் எடுத்த காவல்துறை முதலில் பாபநாசம் பகுதி சாலையில் உள்ள உள்ளுர் போலீசாரின் உதவியுடன் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து இந்த சம்பவம் குறித்து உண்மைத் தன்மையை அறிய காவல்துறையினர் முயற்சி செய்து வந்த நிலையில்,  தற்போது போலிசுக்கு அதிகபட்சமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம்.

பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றியபோது ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டுடன் உறவு வைத்திருந்தாரோ, அதேபோல்  தற்போது பணியாற்றி வரும் நாகையிலும் இரண்டு பெண் காவலர்களுடன் உறவு வைத்துள்ளாராம். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் இது தொடர்பான பல புகார்கள் வர ஆரம்பித்துள்ளதால். இவர் பல பெண்களுடன் தனிமையில் இருந்து வருவதும், இவருக்கு பல பெண்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறதாம். முதல்கட்ட விசாரணையில் நாகையில் இரு பெண் காவலர்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவர் மீது உரிய நடவடிக்கை சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.