போதையில் இருந்த முதியவர்; எதிர்பாராத நிகழ்வினால் பரிதாபம்

A drunken old man; Pity due to an unexpected event

ஈரோடு காசிபாளையம் அருகே மதுபோதையில் தீயில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு, காசிபாளையம், சாஸ்திரி நகர், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் மாதவன். 68 வயதான இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். மகன் நாகராஜ் உடன் மாதவன் வசித்து வந்தார்.மாதவனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மாதவன் அடிக்கடி மது அருந்தி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் விழுந்து கிடப்பது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மாதவன் மது போதையில் காசிபாளையம் ஐடிஐ கல்லூரி எதிரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதாக அவரது மகன் நாகராஜுக்கு தகவல் கிடைத்தது. உறவினருடன் சென்று பார்த்தபோது மாதவன் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதருக்கு யாரோ வைத்த தீயில் மதுபோதையில் தவறி விழுந்துள்ளார். இதில் மாதவனின் ஒரு கால் முழுவதும் தீயில் கருகி இருந்தது. மது போதையால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை.

உடனடியாக நாகராஜ் மற்றும் உறவினர்கள் மாதவனை மீட்டுசிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident liquor police
இதையும் படியுங்கள்
Subscribe