Skip to main content

குடிகாரக் கணவன் - மனைவி எடுத்த அதிரடி முடிவு... அச்சத்தில் குடிகார கணவர்கள்

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் |(35 வயது). கொத்தனாரான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், வெற்றிவேல் மற்றும் ஹரிஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். 

 

Drinking habits



குடிப்பழக்கம் உள்ள செந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர வேலைக்கு செல்லவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றாமல் தினசரி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி சித்ரா கூலி வேலைக்கு சென்ற பிறகு அவர் வீட்டில் வைத்திருந்த அவரது கால் கொலுசை திருட்டுத்தனமாக செந்தில் எடுத்து சென்று அதை 1500 ரூபாய்க்கு அடகு வைத்து அந்தபணத்துடன் டாஸ்மாக் கடைக்கு சென்று குடித்துவிட்டு மாலை நேரத்தில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.


 

 

அப்போது அவரது மனைவி சித்ரா உனக்கு குடிப்பதற்கு ஏது பணம் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். செந்தில் போதையில் தள்ளாட சந்தேகமடைந்த சித்ரா, தான் வைத்திருந்த கால் கொலுசை வீட்டுக்குள் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு போய்தான் தனது கணவர் அடகு வைத்து அந்தப் பணத்தில் குடித்துவிட்டு வந்துள்ளதை அறிந்த சித்ரா கோபத்தின் உச்சத்துக்கு சென்றார்.


 

 

இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. சித்ரா அவர் வீட்டு முன் நின்றிருந்த ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோலை பிடித்து வந்து போதை மயக்கத்தில் படுத்திருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். சூடு தாங்காமல் செந்தில் அலறி துடித்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சித்ராவே  108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி வரவழைத்து தீக்காயம் பட்ட கணவரை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 

தகவலறிந்த கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து சித்ராவிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே குடிகார கணவன் மீது பெட்ரோலை ஊற்றி மனைவியே கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்காயம் பட்ட செந்தில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.