Skip to main content

தட்டிக்கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்; சரமாரியாகத் தாக்கிய குடிமகன்கள்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

  drunken government bus driver was attacked by youths

 

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் இருந்து ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கும் தொழிலாளர்களும், கல்லூரி மாணவர்களும், தினந்தோறும் பேருந்தில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், 94 BCD எண் அரசுப் பேருந்தில் விஜயகுமார் என்பவர் ஓட்டுநராகவும், காலிங்கராஜ் என்பவர் நடத்துநராகவும் இருந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்த பேருந்து கடந்த 18 ஆம் தேதி மதியம் 3 மணியளவில், டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து, கலிங்கநாயக்கன்பாளையத்தில் உள்ள மதுபானக் கடை வளைவில் திரும்பியபோது அங்கு போக்குவரத்து நெரிசலாக இருந்துள்ளது. அப்போது, அந்த சாலையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள், போதையில் அங்கும் இங்குமாய் தள்ளாடிக் கொண்டிருந்தனர்.

 

மேலும், அந்த சமயம் பேருந்து செல்வதற்கு வழியில்லாததால், ஓட்டுநர் விஜயகுமார் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த போதை இளைஞர்கள், "யோவ் எதுக்குயா இப்ப ஹாரன் அடிச்சிட்டு இருக்க? ஆளுங்க நிக்குறது கண்ணுக்கு தெரியலையா?” என ஓட்டுநரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதையடுத்து, பேருந்தை விட்டு இறங்கிய ஓட்டுநர் விஜயகுமார், அந்த இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஓட்டுநர் விஜயகுமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அதில் ஒரு இளைஞர் தான் கையில் போட்டிருந்த இரும்பு காப்பை வைத்து, அவரது மண்டையிலேயே தாக்கியுள்ளார்.

 

மேலும், இதில் படுகாயமடைந்த விஜயகுமார் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்து எஸ்கேப்பான இளைஞர்களில், ஒருவரை மட்டும் விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவரை பேருந்தில் ஏற்றிக்கொண்டு, தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்‌. இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் விஜயகுமார், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில், போலீஸ் விசாரணையில் பிடிபட்ட போதை ஆசாமியின் பெயர் சரண் என்பதும், அவர் அதே கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தப்பியோடிய மற்ற இளைஞர்களைப் பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், பட்டப்பகல் நேரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம், பயணிகள் இடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.