இதையடுத்து சிவானந்தா காலனி வழியாக வந்த ஸ்டீபன் ராஜாவின் காரை மடக்கிப் பிடிக்க பொதுமக்கள் ரத்தினபுரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரை மடக்கிப் பிடித்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டீபன் ராஜ், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஸ்டீபன் ராஜை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், அவர்களுடனும் ஸ்டீபன் ராஜ் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபடார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, காரில் இருந்த லேப்டாப்பை எடுத்து கீழே போட்டு உடைத்துவிட்டு, கழுத்தில் இருந்த செயினையும் அறுத்து ரோட்டில் வீசி போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இறுதியில், ஒரு வழியாக அவரை அடக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தற்போது ஸ்டீபன் ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.