Skip to main content

"அப்பா... நீ குடிக்கிற... எனக்கு கொள்ளி வைக்காதே..." டாஸ்மாக்கை மூட உயிரை கொடுத்த மாணவன்!

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
dinesh kumar

நெல்லை மாவட்டத்தின் குருக்கள்பட்டி அருகே உள்ள கே.ரெட்டிபட்டி கிராமத்தின் விவசாய கூலியான மாடசாமி, இசக்கியம்மாள் தம்பதிக்கு தினேஷ்குமார் பாலசந்திரன் என இரண்டு மகன்கள். வேலை வெட்டிக்கு போகும் தந்தை மாடசாமியோ குடிப்பழகத்திற்கு அடிமையானதால் கிடைக்கும் கூலியை குடியிலேயே காலி பண்ணிவிடுவார். இதனால் தன் கணவனை கண்டித்தே ஒய்ந்துபோன தாய் இசக்கியம்மாள் தன் வருமானத்திலேயே தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்.
 

கடந்த 2008ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தாய் இசக்கியம்மாள் மரணமடைய, தந்தை மாடசாமியோ குடியால் பிள்ளைகளைக் கவனிக்காமலேயே இருந்துள்ளார். தினேஷ்குமாரும் தம்பியும் நிற்கதியானார். இதனிடையே மாடசாமி 2வது திருமணம் செய்துக் கொண்டார். அதன் மூலம் முத்துச்செல்வி என்ற மகளும் உண்டு.

தினேஷ்குமாரும் அவனது தம்பியும் அனாதையான நிலையில், படிப்பதற்குரிய சூழல் இல்லாததை கண்டு, மதுரையில் ஆசிரியர் பணியிலிருக்கும் அவனது சித்தப்பா சங்கரகுற்றலாம் தன் பராமரிப்பிற்கு அவர்களை கொண்டு வந்ததோடு, தினேஷை நாமக்கல் மாவட்டம் ஆண்டலூரிள்ள விகாஷ் மெட்ரிக் பள்ளியிலும், தம்பியை மதுரையிலுள்ள பள்ளியிலும் படிக்க வைத்திருக்கிறார்.
 

தந்தை மறுமணம் செய்ததால், சித்தியோ சரியாக கவனிக்காததோடு, அவர்களுக்கு சாப்பாடு கூட முறையாக தருவது இல்லையாம். இதன் காரணமாக தினேஷ் கிராமத்திற்கு விடுமுறையில் எப்போதாவது வந்து போவான். அப்போது கூட அவன் குடிக்க வேண்டாமென்று தன் தந்தையை கண்டித்ததோடு அவரோடு வாக்குவாதம் பண்ணியிருக்கிறார்.

 

dinesh kumar


 

இதனிடையே +2 பரீட்சையை நெல்லை சென்டரில் எழுதி தினேஷ் மதுரையிலுள்ள தன் சித்தப்பா வீட்டிற்கு போனவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிபட்டிக்கு வந்திருக்கிறான். அது சமயம் குடிப்பதற்கு பணமில்லாமல் தவித்த தந்தை மாடசாமி, அவனது சட்டைபையில் இருந்த 1500 ரூபாய் பணத்தை எடுத்திருக்கிறார். அதைக் கண்ட தினேஷ் அவரிடமிருந்த பணத்தை பிடுங்கியதோடு, பணம் தரமாட்டேன் சித்தப்பா என் செலவுக்காக கொடுத்த பணத்தை சேமித்து செல் வாங்க வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு தினேஷ் பணத்தோடு வெளியேறியுள்ளார். மேலும் திருந்தாத தன் தந்தையின் நிலை அவனை மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது. அதே கவலையில் சென்னை சென்று தன் உறவினர்களை பார்த்து விட்டு மனம் ஒடித்த நிலையில் நெல்லைக்கு வந்தவன் பாளை தெற்கு புறவழிச் சாலையிலுள்ள மேம்பாலத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.

அவனுடைய உயிர் போனதுமில்லாமல் அவன் எழுதிய உருக்கமான கடிதம்தான் பாறை மனதையும் நொறுக்குவதாக இருந்தது.

 

dinesh kumar


 

''அப்பா நீ திருத்தமாட்ட, எனக்கு கொள்ளி வைக்காதே. நீ கொள்ளி வைச்சா என் மனசு ஆறாது. சித்தப்பா மணிதான் எனக்கு கொள்ளி போடனும். இனி எந்த ஒரு தந்தையும் குடிக்கக் கூடாது. பாரத பிரதமரே, சாரய கடையை அழியுங்கள். மூட முடியலையா, நான் ஆவியா வந்து குடிப்பவங்களை பயமுறுத்துவேன். மதுக்கடைகளை அடைப்பேன். இது சத்தியம்'' என்று மரண சாசனம் எழுதியிருக்கிறார்.

தினேஷின் மாமா சங்கரலிங்கம், ''அவன் ஊருக்கு வந்தா எங்க வீட்டுல இருப்பான். இங்கதான் அவனுக்கு சாப்பாடு. அவன் அப்பனை கண்டிச்சும் அவன் குடியை நிறுத்தல. நல்லா படிக்கிற பையன். ஒழுக்கமான பையன் படிப்பில் முதல் ரேங்க்ல வரவேண்டிய பையன். இந்த முடிவுக்கு போயிட்டானே என கண் கலங்கினார்.
 

இனி மேலாவது அரசுக்கு உரைக்குமா...


 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.