Skip to main content

போதையிலிருந்து மீண்டுவர அறிவுரை கொடுத்த நண்பனை போதை ஊசி போட்டு கொல்ல முயன்றவர்கள்!!!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018

திருச்சியில் கஞ்சா, போதை, சரக்கு என தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தலைவிரித்து ஆடுவதால் திருச்சியில் அடிதடி, கொலை, திருட்டு என நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே வருகிறது. எளிதில் கிடைத்துவிடும் போதையில் இளைஞர்கள் வெகுவாக போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதை விட கொடுமை இவர்களை போதையில் இருந்து தப்பித்து இயல்பு வாழ்க்கைக்கு வாழ சொன்ன நண்பனுக்கே தூங்கும் போது போதையில் போதை ஊசி போட்டதால் கைகள் அழுகும் நிலைக்சென்ற கொடுமை திருச்சியில் நடந்திருக்கிறது. 

 

drug


 

திருச்சி சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சியில் கூர்க்கா வேலை செய்து கொண்டுயிருக்கிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், அக்கா வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் சின்னமார்க்கெட் கடை மாடி மற்றும் அன்னதான சத்திரத்தில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது உறவினர் குமார் என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில் குமாரின் நண்பர்கள் அருண், தர்மா ஆகிய இருவரும் மாடி அறையில் தங்கியிருந்தனர். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய இருவரும், போதை ஊசியும் அடிக்கடி உடலில் செலுத்தி வந்தனர். 

 

 

 

இவர்களோடு கூட இருந்த அஜித்குமார் கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், தர்மா இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரின் இடது கையில் போதை ஊசியை செலுத்தி உள்ளனர். 

 

இதனால் அஜித்குமார் வலியால் துடித்து நிலையில் ஒரு நாட்களில் ஊசி செலுத்தப்பட்ட பகுதி மரத்து கருத்து போனதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். போதையில் ஊசி போட்டதால் நரம்புகளில் ஊசி போடுவதற்கு பதிலாக தசைப்பகுதியில் ஊசி போட்டதால் மருத்து சதை பகுதியில் இறங்கி அவருடை கை கருப்பு அடைய ஆரம்பித்துள்ளது. 

 

 

 

இதையடுத்து, திருச்சி அடுத்த ஒரு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். 

 

மேலும் போதை மாத்திரை எங்கு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சியில் உள்ள மெடிக்கல்களில் முக்கியமான காந்திமார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், புத்தூர், அரசு மருத்துவனை பகுதியில் தடைசெய்யப்பட்ட மருந்துகள், மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கொடுப்பதால் இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு மெடிக்கல் கடைகளில் ஈசியாக கிடைப்பதால் அவர் போதையின் அடிமையாகவே வாழ்கிறார்கள். 

 

 

 

அஜித் நண்பர்கள் அருண், தர்மா, போதை மாத்திரை விற்றதாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெடிக்கல் கடை யில் தொடர்ந்து வாங்கியிருப்பது விசாரணையில் தெரிந்ததால் ஊழியர் வெள்ளையன் (எ) சுரேஷ் பாபு, உரிமையாளர் வசந்தா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

 

அறிவுரை செய்த நண்பக்கு நண்பர்களே போதை ஊசி போட்ட கொடுமை திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது