Skip to main content

மருத்துவர் கு.சிவராமனின் அமுது உணவகம்

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
dr.sivaraman amuthu restaurant



கடந்த 25 ஆண்டுகளாக சித்த மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் கு.சிவராமன் வெறும் மருத்துவப் பயிற்சி மட்டுமல்லாது தொடர்ச்சியாக பாரம்பரிய உணவை, உழவை மீட்டெடுக்கும் பணியை நம்மாழ்வார் வழியில் செய்து வருகின்றார். சித்த மருத்துவத்தின் அடித்தளம் உணவு. அதற்கு மிகப் பொருத்தமாய், அவர் நடத்தும்  சித்த மருத்துவமனையின் அடித்தளத்தில் அவர் உணவகத்தை தொடங்கியிருக்கிறார். 
 

திருச்சியில் சிறுதானிய உணவகமான ஆப்பிள் மில்லட்டின் தொழில் நுட்பத்தைப் பெற்று அவர்களோடு இணைந்து, இந்த உணவகத்தை தொடங்கியிருக்கிறார். நாம் அடிக்கடி சொல்லி வரும் நம் உணவுப்பொருளின் மதிப்பு கூட்டும் விஷயம்தான் அமுது.

 

dr.sivaraman amuthu restaurant


இன்று சிறுதானியங்களுக்கு ஒரு புது முகவரி. மருத்துவர் சிவராமன் மூலம் அதன் முழு மருத்துவ பலனையும், அமுது உணவகம் மூலம் கூடுதல் மதிப்பும் சுவையும் கிடைக்கப் போகின்றன. பாரம்பரிய சிறுதானிய உணவு என்றாலே சுவை கொஞ்சம் கம்மியாக இருக்குமோ, எந்த அளவு தரமான சரியான பொருள் அது என்கிற கேள்விகள்  நிறைய முன் எழுகின்றன. இப்போது, இரண்டுக்குமே பதிலளிக்கும் விதமாய் தரத்தை உறுதி செய்து, சுவையின் மதிப்பை கூட்டி அமுது படைக்கின்றார்கள், ஆரோக்கியக் குடும்பத்தினர்.

 

dr.sivaraman amuthu restaurant


''கடைக்குட்டிச்சிங்கம்'' படத்தில் உழவன் மகனாய் நடித்தவர் கார்த்தி. வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப்படம் ஈட்டிய பணத்தின் பெரும் பகுதியை உழவர் சமூகத்துக்கு திரும்பிக் கொடுக்க வேண்டும் என்கிற கார்த்தியின் எண்ணத்தால் உருவானது உழவன் பவுண்டேஷன். கடந்த பொங்கல் தினம் அன்று, உழவில் கோலோச்சி நம்பிக்கை அளித்துவரும் விவசாயிகளை அழைத்து தலா ஒரு லட்சம் கொடுத்து கவுரவப்படுத்தியது. மரு. கு.சிவராமனும் அந்த ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார்.

 

dr.sivaraman amuthu restaurant


இன்று நம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முதலில் உழவினை மதிக்க வேண்டும். உழவர்களை மதிக்க வேண்டும். நம் நாட்டு உழவுப் பொருட்களுக்கு நல்ல சந்தை ஏற்படுத்தி, அவர்கள் பொருட்களின் மதிப்பைக் கூட்ட வேண்டும். தமிழகமெங்கும், இந்தியா முழுவதும், இந்திய விவசாயிகளிடம் பெறும் உழவுப் பொருட்களுக்கு, உரிய பணத்தை கொடுத்திட வேண்டும். அப்படிச்செய்தால் மட்டும்தான் நம் உழவை மீட்டெடுக்க முடியும். எல்லாவற்றிற்கும் அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்காமல், நம்மளவில், அன்றாட வாழ்வில் நம் உழவுப் பொருட்களுக்கு, நம் சிறுதானியங்களுக்கு இடம் கொடுத்தாலே யார் கையையும் எதிர்பார்க்காது நம் உழவன் பீடு நடை நடக்க முடியும். நம் தமிழ் நாட்டின் 5-6 கோடி மக்கள் அன்றாட தேவைக்கு, வெளி நாட்டுப் பொருட்களை நம்பியிராமல், டெல்டா மாவட்டத்தில், நெல்லை மாவட்டத்தில், கொங்கு மாவட்டத்தில் விளையும் பொருளை பயன்படுத்த துவங்கினாலே, நம் விவசாயிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுவிடுமே.

 

dr.sivaraman amuthu restaurant


இந்த விஷயங்களை மனதில் கொண்டு, சரியான தரமான உழவுப் பொருட்களை கொள்முதல் செய்து, இரசாயன உதவிகளின்றி மதிப்பு கூட்டி, சுவை மிக்க உணவாக்கி அமுது உணவகம் இயங்க உள்ளது. கூடவே வெளிநாட்டில் பிரபலாமய் உள்ள fair trade practice எனும் உற்பத்தியில் இருந்து நுகர்வோர் வரை அத்தனை பேரும் பயன் பெரும் வணிகப் பயிற்சியை அமுது இங்கு செயல்படுத்த உள்ளது. அமுதில் இருந்து ஈட்டப்படும் நிகரலாபம், மீண்டும் விவசாயிகளிடம் பகிரப்படும். உழவிற்கு உதவி செய்ய அத்தொகை பயன்படும். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.