Skip to main content

மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

tt

 

அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் பணிமனையிலிருந்து ஒரு பேருந்து புதுச்சேரி - திருப்பதி இடையே தினசரி இயக்கப்பட்டுவருகிறது. நேற்று முன் தினம் திருப்பதியில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தரனேந்திரன், பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அந்த பேருந்தில் நடத்துநராக ஹோலி பேஸ் என்பவர் இருந்துள்ளார். 

 

இந்த பேருந்து புறப்பட்டதிலிருந்து மிகவும் மோசமாக இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் மது போதையில் பேருந்தை இயக்குவதை மக்கள் அறிந்தனர். அதன்பிறகு அவர்கள் நடத்துநரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பின் ஓட்டுநரை எழுப்பிவிட்டு, நடத்துநரே பேருந்தை வந்தவாசி வரை இயக்கிவந்துள்ளார். 

 

அதற்குமேல், நடத்துநர் பேருந்தை ஓட்டக்கூடாது எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயணிகள் சத்தம் போட்டதோடு அங்கிருந்தபடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வந்தவாசி போலீசார் விரைந்து வந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். 

 

அங்குவந்த அதிகாரிகள், உடனடியாக மாற்று ஓட்டுநரை வர வழைத்து வந்தவாசியிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தை இயக்கியுள்ளனர். இது சம்பந்தமாக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி குடிபோதையில் பேருந்தை இயக்கிய தரநேந்திரன், அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி நடத்துநர் ஹோலி பேஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

People travel with umbrellas inside the bus!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது. 

 

இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

Next Story

அரசுப் பேருந்து நடத்துநர் மோசடி! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Government bus conductor fraud!

 

கடலூர் மாவட்டம், வடலூர், ஊமங்கலம் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மழவேந்தி, உத்திராபதி ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஏறினார்கள். அப்போது அவர்கள் பயணிகளின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்து சீரியல் எண் சரி பார்த்தபோது அந்த டிக்கெட் பழைய டிக்கெட் எனத் தெரியவந்தது.

 

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் டிக்கெட்டை பரிசோதித்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகளிடம் இருந்த டிக்கெட் ஏற்கனவே பயணம் செய்தவர்களின் டிக்கெட் என்றும் இது பழைய டிக்கெட் என உறுதியானது. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார். அதன் காரணமாக அவரது பணப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த டிக்கெட் பழைய டிக்கெட் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சத்தியமூர்த்தி மற்றும் நடத்துநர் நேரு ஆகிய இருவரையும் சேலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.

 

இவர்கள் நடத்திய விசாரணையில், நடத்துநர் பழைய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடியில் ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.