Skip to main content

ஓட்டுநர் தற்கொலை... தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

Driver suicide; Police in intensive investigation

 

திருவாரூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீட்டில் அவரது கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் ராமசந்திரன் (52). இவரது மனைவி ஜெயக்குமாரி (41). இவர் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறார். சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுநராக மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (27) இருந்துள்ளார். 

 

இந்நிலையில், கார் ஓட்டுநர் சுந்தர், சுகாதார ஆய்வாளர் ராமசந்திரனின் வீட்டுப் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சுந்தரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கார் ஓட்டுநர் சுந்தரின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் சரஸ்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சுகாதார ஆய்வாளரைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர். 

 

விசாரனையில், கார் ஓட்டுநர் சுந்தர் தன்னிடம் செல்ஃபோன் கேட்டதாகவும், வாங்கித்தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுநராக இருந்த திருத்துறைப்பூண்டி இளைஞர் ஒருவர் இதுபோல ஒரு விபத்தில் உயிரிழந்ததும், அந்த விபத்து தொடர்பாக ஏற்பட்ட சந்தேகமும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்தச் சூழலில் ராமச்சந்திரனின் தற்போதைய வாக்குமூலமும், ஏற்கனவே நடந்த விபத்தில் பழைய கார் ஓட்டுநர் உயிரிழப்பு சமயத்தில் கொடுத்துள்ள வாக்குமூலமும் போலீசாருக்குப் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதால் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.