ADVERTISEMENT
தீபாவளியை முன்னிட்டு நிறுவனங்கள், கடைகள் என பல்வேறு தரப்பினரும் பல சலுகைகளை வழங்கியுள்ளன. அதேபோல் ஒரு நூதன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு நூதன பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரம் ரூபாய்க்குமேல் மது அருந்தினால் எல்இடி டிவி பரிசு என அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜாம்பஜார் காவல்துறையினர், பார் மேலாளர் வின்சென்ட் ராஜ் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளார் ரியாஸ் அகமது ஆகியோரை கைது செய்தனர். பார் உரிமையாளரான அதிமுக முன்னாள் கவுன்சிலர் முகமது அலி ஜின்னா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரில் இருந்து எல்இடி டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், குலுக்கல் பெட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Show comments