Skip to main content

திராவிட கொலம்பஸ் கால்ட்வெல்! - பெருமைப்படுத்திய வைரமுத்து!

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
vaiko


நெல்லையில் நடைபெற்றது பைந்தமிழ் மன்றம் தமிழாற்றுப் படை மற்றும் கால்டுவெல் நூல் வெளியீட்டு விழா. பாளை நூற்றாண்டு மண்டபத்தில் அதன் மன்றத் தலைவர் வைகோ முன்னிலையில் கவிஞர் வைரமுத்து தமிழுக்கு போப் கால்டுவெல் ஆற்றிய பணியினை மெச்சத் தகுந்த வகையில் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் கால்டுவெல் நூலை வைகோ வெளியிட அதனை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். ஏற்புரையாகப் பேசிய கவிஞர் வைரமுத்து..

தமிழுக்கான ஒப்பிலக்கணம் வளரச் செய்தவர் கால்டுவெல். வ.உ.சி., பூலித்தேவன், கட்டபொம்மன் புதுமைபித்தன் உள்ளிட்ட கல்வியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அறிவு ஜீவிகள் பிறந்த மண் இது. அவர்களுக்குச் சுயமரியாதை அதிகம் உண்டு. மட்டுமல்ல தாமிரபரணிக்கும் சுய மரியாதை உண்டு. காரணம் தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே மறைவதுதான் அதன் சுய மரியாதை. கால்டுவெல் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காக வந்தவர் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர். செய்யுள் நடைமுறைத் தமிழை உரைநடை வடிவில் கொண்டு வந்தவர். அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தமிழகத்தில் மறைந்த போப் கால்டுவெல்லுக்குப் பல பெயர்கள் இருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக அவருக்கு நான் திராவிட கொலம்பஸ், என்று பெயர் சூட்டுகிறேன் என்று பெருமைபடப் புகழாரம் சூட்டினார் கவிஞர் வைரமுத்து.
 

Dravidian Columbus Caldwell! - Glorious Vairamuthu!


முன்னதாகப் பேசிய வைகோ திருமூலர், பாரதி, பாரதிதாசன் தொல்காப்பியர் ஆற்றுப் படை என 18 ஆற்றுப்படைகள் உள்ளன. அந்த வகையில் 19 வது ஆற்றுப்படையாக காவ்டுவெல் ஆற்றுப்படை விளங்குகிறது. 1838 ஆம் ஆண்டு ஜனவரி அன்று நான்கு மாதப் பயணத்திற்கு பின்பு சென்னை வந்திறங்கிய கால்டுவெல் திருவாசகம், திருக்குறள் பைபிளை மொழிபெயர்த்தார். சென்னை, தஞ்சை, திருச்சி, நீலகிரி அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்தே சென்று சமுதாயப் பணியாற்றியவர் கால்டுவெல் 1841 நாசரேத் வந்த கால்டுவெல் கிணறுகள் பாடசாலைகளை அமைத்தார் பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கியவர் போப் கால்டுவெல் என சிறப்புரையாற்றினார் வைகோ.

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.