Skip to main content

திராவிடர் கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி விபத்தில் மரணம்!!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

திராவிடர் கழக மாநிலப் பொருளாளராக இருந்தவர் டாகடர் பிறைநுதல் செல்வி .72 வயதான இவர் தன்  கணவர் கவுதமனுடன் குன்னூரில் வசித்து வந்தார் .இவர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு திருப்பூருக்கு வந்தார் , பின்னர் அங்கிருந்து காரில் குன்னூருக்கு வந்து கொண்டிருந்த பிறைநுதல் செல்வியின் கார் மீது காட்டேரிப் பகுதியில் எதிரே வேகமாய் வந்த கார் ஒன்று மோதியது .

 

Dravidar Kazhagam State Treasurer's Death

 

மோதிய வேகத்தில் காரில் பிறைநுதல் செல்வி அணிந்திருந்த சீட் பெல்ட் கொக்கி அவரது வயிற்றில் குத்த காயம் ஏற்பட்டது. பின்னர் குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்[பட்டது . ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் . பிறைநுதல் செல்விக்கு இனியன் என்ற மகனும் , யாழிசை என்ற மகளும் இருக்கின்றனர். 

.

ஈரோட்டைச் சேர்ந்த இவர் 22 ஆண்டு காலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராகவும், கோத்தகிரி தலைமை ஆஸ்பத்திரியில்  தலைமை டாக்டராகவும் , மாவட்ட சுகாதார இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிறைநுதல் செல்வி .


அவரது உடல் குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருக்கிறது .

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி... சோகத்தில் கிராமத்தினர்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

3

 

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் அளவுக்கு மழையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

 

திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பாலங்களில் காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் பூசாரி அரிராஜ் (40). கோவில் நடையைச் சாற்றி விட்டு வீடு திரும்பிய போது ஆற்றைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக்குழுவினர் அரிராஜை தேடிய பொழுது இறந்த நிலையில் இருந்த அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.