Advertisment

மனைவி கண் விழிக்கவில்லை என நாடகம்; விசாரணையில் சிக்கிய பரோட்டா மாஸ்டர்

 The drama of the wife is not awake; Parotta Master caught up in the investigation

குடும்பத் தகராறில் மனைவியைக்கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மனைவி கண் விழிக்கவில்லை என நாடகமாடிய கணவரை கைது செய்த சம்பவம் நாகர்கோவிலில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

நாகர்கோவிலில் பரோட்டா மாஸ்டராக இருந்து வந்தவர் முகமது உசேன். இவரது மனைவி ரெஜின் பானு. இன்று காலை மனைவி ரெஜின் பானு கண்விழிக்கவில்லை, மயங்கி விழுந்து விட்டார் என ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த முகமது உசேன், அவரைக் கொண்டு சென்று கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அப்பொழுது ரெஜின் பானுவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

Advertisment

ரெஜின் பானுவின்கழுத்துப்பகுதி நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் முகமது உசேனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்தது. மேலும், காலையில் மனைவி கண் விழிக்கவில்லை, மயங்கி விழுந்து விட்டார் என்று நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

incident nagerkovil police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe