நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாடகக் கலைஞர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்