Skip to main content

மாணவர்கள் கொண்டாடிய டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் (படங்கள்)

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

சென்னை, கண்ணகிநகர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (15.01.2021) டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும்  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜெ. 11 காவல் நிலைய ஆய்வாளர் ஆல்ஃபின் ராஜ் வருகை தந்து பரிசுகளை வழங்கினார். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பரிசுகளாக இயற்கை முறையில் விதைகளுடன் தயாரிக்கப்பட்ட எழுதுகோல், நோட்டு மற்றும் ஆத்திச்சூடி போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

ad

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா! (படங்கள்)

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

நேற்று (2.11.2021) சென்னை வடபழனியில் உள்ள க்ரீன் பார்க்கில் ஸ்மார்ட் வில்லேஜஸ் என்னும் மாபெரும் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தக பங்களிப்பாளர்களில் கல்வியாளர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மிக முக்கியமாக தீர்வு செயல்படுத்தப்படுபவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில் வெ. பொன்ராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

 

 

Next Story

கலாமிற்கு அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்! (படங்கள்)

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (27.07.2021) அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், ஷில்லாங்கில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே இறந்தார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ராமேஸ்வரம் அருகே பேய்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, காவல்துறை டிஐஜி மயில்வாகனன் மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர். அதேபோல் சென்னை சூளை பகுதியில் உள்ள பொதுநல மன்றம் சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.