Skip to main content

"ஆதார் அட்டையை" இணையதளம் மூலம் பதிவிறக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளலாம்.

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

மத்திய அரசு "ஆதார் அட்டைக்கென்று"  தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் "Unique Identification Authority of India" ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று "ஆதார் அட்டையை" பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம். திருத்தம் மேற்கொள்ள ஆதார் சேவை மையம் வசூலிக்கும் கட்டணம் ரூபாய் 30 ஆகும்.

 

adhar card



ஆதார் அட்டையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
 ஆதார் அட்டை இல்லாதோர் "ஆதார் சேவை மையம்" அணுக வேண்டும். அங்கு ஆதார் மையத்தில் இருக்கும் அலுவலர் ஒரு விண்ணப்பம் கொடுப்பார். அதை பூர்த்திச்செய்து அந்த அலுவலரிடம் கொடுத்த பின்பு "விண்ணப்பத்தில் பெயர் உள்ளவரை அனைவரையும் தனித்தனியே புகைப்படம் மற்றும் கண் கருவிழிகள் , கைரேகை பதிவு செய்த பிறகு தனித்தனியே "Acknowledgement Receipt" தருவார். ஆதார் அட்டையை பதிவு செய்வதற்கான குறுந்தகவல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும். சில நாட்கள் கழித்து இந்த "Acknowledgement No" யை இணையதளம் மூலம் பதிவிட்டு ஆதார் அட்டையின் நிலையை கண்டறியலாம்.

இதற்கான இணைதள முகவரி : 
https://resident.uidai.gov.in/check-aadhaar-status ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள எண்கள் மற்றும் பெயரை பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

 

adhar card



ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய இணையதள முகவரி : https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html

"ஆதார் அட்டை" பிளாஸ்டிக்கில் "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வேண்டுமென்றால் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான இணையதள முகவரி : https://resident.uidai.gov.in/aadhaar-reprint
ஆகும். இதில் ரூபாய் 50 கட்டணத்தை இணைய தள வழியில் செலுத்தி AADHAAR CARD - ன் ENROLLMENT NO மற்றும் DATE AND TIME யை பதிவு செய்தால் பதிவுச்செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு "OTP" வரும். பின்பு "OTP" -யை பதிவிட்டு "Aadhaar Smart Card"-யை புக் செய்யலாம். பின் ஐந்து நாட்களுக்குள் "ஆதார் அட்டை" தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

"ஆதார் அட்டையில்" இணையதள வழியில் திருத்தம் மேற்கொள்ளலாம்!
1.பிறந்த தேதி.
2.தொலைபேசி எண்.
3. முகவரி 

உள்ளிட்ட திருத்தங்கள் மட்டுமே நம்மால் மேற்கொள்ளும் வகையில் ஆதார் ஆணையம் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருத்ததை மேற்கொள்ள முதலில் ஆதார் அட்டையில் "தொலைபேசி எண்" இணைத்திருக்க வேண்டும். அப்போது தான் இணையதளத்தை பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள் :
1.பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ள (Voter ID, Driving License, Passport )
2.முகவரி மாற்றம் செய்ய விரும்பினால் (இருப்பிட சான்றிதழ் , கேஸ் ரசீதி , Passport) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் அசல் வேண்டும் . ஏனெனில் "Scan" செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் அட்டையின் திருத்தம் மேற்கொள்ள இதற்கான இணைய தள முகவரி : https://ssup.uidai.gov.in/web/guest/aadhaar-home ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று திருத்தம் மேற்கொண்ட பின் "Acknowledgement Receipt" வரும். இதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். பின்பு ஆதார் அட்டை திருத்ததின் நிலையை அறிய இணைய தள முகவரி : https://ssup.uidai.gov.in/web/guest/check-status .

தங்கள் ஆதார் எண் எந்தெந்த வங்கிகள் மற்றும் மற்ற இடங்களில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இணையதள முகவரி : https://resident.uidai.gov.in/bank-mapper . இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை பதிவிட்டு விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.ஆதார் சேவை மையம் தங்கள் பகுதியில் எங்கு உள்ளது ? என்பதை அறிந்துக்கொள்ள இணைய தள முகவரி : https://appointments.uidai.gov.in/easearch.aspx?aspxerrorpath=/centersearch.aspx சென்று தங்கள் வசிக்கும் மாவட்டம் , மாநிலம் , உள்ளிட்டவை பதிவு செய்தால் தங்கள் பகுதியில் ஆதார் சேவை மையம் எங்குள்ளது என்பதை எளிதாக அறியலாம்.

ஆதார் அட்டை தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (Toll Free) : 1947
ஈ-மெயில் : help@uidai.gov.in. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்கள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் தேவை .


 

பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.