Skip to main content

"அனைத்து முதியோருக்கும் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும்" - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

doorstep delivery for old age pension i periyasamy 

 

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மணிகண்டன், சபா ராஜேந்திரன், ஐயப்பன் மற்றும் இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியசாமி, "தமிழக முதல்வர் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற திட்டத்தின் அடிப்படையில் வருவாயில் ஊராட்சிகளுக்கு தேவையான நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். குறைவான மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக இருந்தாலும் அந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி ஒதுக்கீட்டில் 51 சதவீதம் ஊராட்சிகளுக்கும் 49 சதவீதம் நகராட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். ஊரக உள்ளாட்சித் துறை  சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வழியாக விவசாயத்திற்கு பயன்படுகின்ற கால்வாய்கள் உட்பட அனைத்து சிறிய கால்வாய்களும் வேளாண்துறையின் சார்பில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 70 ஆயிரம் கிராமங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வருகின்றன. தற்போது வரும் 15 நாட்களுக்குள் அதை 40 ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் உயர்த்தி பணிகள் நடைபெற ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஊராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஜல்ஜீவன், மெசர் திட்டத்திற்கு அப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் குடிநீர் தேவைக்காக கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உயரத்தை 12 மீட்டர் அளவில் உயர்த்திக் கட்ட வேண்டும்.  பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்குப் பதிலாக புதிதாக மேல்நிலை நீர் சேர்க்கை தொட்டிகள் கட்டித் தர தேவையான நிதியை வழங்கி அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திருவிழா ஏற்படுத்திட வேண்டும். அதற்கான ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க அரசு அனைத்து உதவிகளும் செய்து தரும். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பணியைத் திறம்படச் செய்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 60 வயதைத் தாண்டிய அனைத்து முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

கூட்டுறவு வங்கிகளின் 5 சவரனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் அரசு தள்ளுபடி செய்தது. மேலும் 12,41 கோடி ரூபாய் அளவுக்கு அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டி அதற்கான விதியை தமிழக முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் துயரத்தை துடைத்து வருகிறார் தமிழக முதல்வர்" என்று அமைச்சர் பேசினார். ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியின் இறுதியில்  காணை ஊராட்சி ஒன்றியம் பனைமலை பேட்டை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி 12 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.

Next Story

பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை; களத்தில் இறங்கிய உ.பி.கள்!!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Minister I. Periyasamy consultation with Theni district party officials

தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் அதிமுக சார்பில் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பிஜேபி கூட்டணி கட்சி சார்பில் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட சில கட்சிகளும் தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள்.

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெரியகுளம், கம்பம்‌, ஆண்டிபட்டி, சோழவந்தான் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றியுள்ளது. போடி, உசிலம்பட்டி  தொகுதிகளை எதிர்க்கட்சியான அதிமுக வசம் உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இத்தொகுதி ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக தான் இருந்து வருகிறது. அது போல் கடந்த தேர்தலில் அதிகாரம் பண பலம் இருந்தும் கூட ஓபிஎஸ் மகன் ஓபிஆர் 5,04,813 ஓட்டு தான் வாங்கினார். ஆனால் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய இ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிகாரம் பண பலம் இல்லாமல் 4,28,120 லட்சம் ஓட்டு வாங்கி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் (76693) தோல்வியை தழுவினார்.

Minister I. Periyasamy consultation with Theni district party officials

ஆனால் தற்பொழுது அதிமுக உடைந்திருப்பதால் அந்த ஓட்டுகளும் சிதற வாய்ப்பு உள்ளது. அது போல் டிடிவிக்கும் இலை ஓட்டுகள் விழுக வாய்ப்பு உள்ளது. அதனால் கடந்த முறை வாங்கிய ஓட்டுகள் வாங்கினாலே தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று விடுவார். அதனால்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தேனி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினோ, இத் தொகுதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது போல் தமிழக அளவில் அதிக ஓட்டுகள்  வாங்க வேண்டும் என்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பேசி விட்டு சென்றிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வனும் தொகுதியில் களமிறங்கி வாக்காள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அது போல் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியும் தொடர்ந்து தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி முழுக்க  ஆய்வு செய்து பொறுப்பில் உள்ள உ.பி.க்களையும் களத்தில் இறக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்திற்கு திடீரென நேற்று  முன் தினம் காலை விசிட் அடித்த அமைச்சர் ஐ.பி. பெரியகுளம்  கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் முக்கையா, உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி கடந்த தேர்தலுடன் கூடுதல் ஓட்டுகள் வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .

Minister I. Periyasamy consultation with Theni district party officials

அதைத் தொடர்ந்து தேனியில்  நகர பொறுப்பில் உள்ள உ.பி.க்களிடமும் தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து போடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் தொகுதி பொறுப்பாளரான மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன்  கட்சி ஆபீஸ்சில் ஆலோசனை செய்து இத்தொகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இருக்கிறார். அதைத்தொடர்ந்து தர்மத்துப்பட்டி,  நரசிங்கபுரம்பாளையத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பி. ஆலோசனை செய்தார் அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக கம்பம் ராமகிருஷ்ணன் வாங்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமியை சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருமான ஸ்டாலின் சொன்னது போல் இந்த தொகுதியில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு எல்லாம் நீங்கள் இரவு பகல் பாராமல் தேர்தல் பணி செய்ய வேண்டும். அப்படி  வேலை பார்த்தால் தான் இத்தொகுதியில் அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியும். பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் தலைவர் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைத் தொகையை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். அதன் மூலம் மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள். அதனால் உடனடியாக தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று உறுதிபடக் கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து உ.பி.களும் தேர்தல் காலத்தில் அதிரடியாக இறங்கி  மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.