Skip to main content

"அனைத்து முதியோருக்கும் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும்" - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

doorstep delivery for old age pension i periyasamy 

 

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மணிகண்டன், சபா ராஜேந்திரன், ஐயப்பன் மற்றும் இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியசாமி, "தமிழக முதல்வர் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற திட்டத்தின் அடிப்படையில் வருவாயில் ஊராட்சிகளுக்கு தேவையான நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். குறைவான மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக இருந்தாலும் அந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி ஒதுக்கீட்டில் 51 சதவீதம் ஊராட்சிகளுக்கும் 49 சதவீதம் நகராட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். ஊரக உள்ளாட்சித் துறை  சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வழியாக விவசாயத்திற்கு பயன்படுகின்ற கால்வாய்கள் உட்பட அனைத்து சிறிய கால்வாய்களும் வேளாண்துறையின் சார்பில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 70 ஆயிரம் கிராமங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வருகின்றன. தற்போது வரும் 15 நாட்களுக்குள் அதை 40 ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் உயர்த்தி பணிகள் நடைபெற ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஊராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஜல்ஜீவன், மெசர் திட்டத்திற்கு அப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் குடிநீர் தேவைக்காக கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உயரத்தை 12 மீட்டர் அளவில் உயர்த்திக் கட்ட வேண்டும்.  பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்குப் பதிலாக புதிதாக மேல்நிலை நீர் சேர்க்கை தொட்டிகள் கட்டித் தர தேவையான நிதியை வழங்கி அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திருவிழா ஏற்படுத்திட வேண்டும். அதற்கான ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க அரசு அனைத்து உதவிகளும் செய்து தரும். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பணியைத் திறம்படச் செய்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 60 வயதைத் தாண்டிய அனைத்து முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

கூட்டுறவு வங்கிகளின் 5 சவரனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் அரசு தள்ளுபடி செய்தது. மேலும் 12,41 கோடி ரூபாய் அளவுக்கு அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டி அதற்கான விதியை தமிழக முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் துயரத்தை துடைத்து வருகிறார் தமிழக முதல்வர்" என்று அமைச்சர் பேசினார். ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியின் இறுதியில்  காணை ஊராட்சி ஒன்றியம் பனைமலை பேட்டை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி 12 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.