Skip to main content

எங்களுக்கு உரிமை இல்லையா.. தேர்தல் ஆணையம் ஏன் எங்களை நிராகரித்தது..? 

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Don't we have the right .. Why did the Election Commission reject us ..?
                                                         கோப்பு படம்


தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று, வாக்கு எண்ணும் நாளுக்காக தமிழகம் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாக்குப்பதிவின்போது பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் வாக்குப்பதிவு பணிக்காக நியமிக்கப்பட்டு, அதன்படி தேர்தல் ஆணையம் பிரித்துக் கொடுத்த பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். 

 

தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட அரசு சார்ந்த பணியாளர்கள் பட்டியலில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவல் பணியாளர்களும் அடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு உதவியாக, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் முன்னெச்சரிக்கையான தகவல்கள் தர என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த ஊர்க்காவல்படை என்ற அமைப்பை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. 

 

தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஊர்க்காவல் படையினர் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 380 ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். தேர்தலின்போது இந்த ஊர்க்காவல் படையினர் அனைவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கான வாக்குப்பதிவு என்பது மறுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள ஊர்க்காவல் படையினருக்கு தபால் வாக்குகள் மூலம் தங்களுடைய வாக்கைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்க்காவல் படையினருக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

 

அதிகாரிகள் அவர்களுக்கான தபால் வாக்குகளைப் பதிவுசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஊர்க்காவல் படையினர், “எங்களுக்கு உரிமை இல்லையா” என்ற கேள்வியைக் காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் எழுப்பியுள்ளனர். “எங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற ஏன் எங்களை தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கருத்தில் கொள்ளவில்லை” என்று கேள்வி எழுப்பியவர்கள், “எங்களுக்கும் ஓட்டுப்போட உரிமை இருக்கிறது. எங்களுடைய வாக்குகளை ஏன் பதிவிடாமல் போனீர்கள்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களுக்கான தீர்வை தேர்தல் ஆணையம் எடுக்குமா? என்று பொதுமக்கள் தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.